ஆதரவு காட்டும் மாமா மீது அன்பு, , அவர் மகள் மீது பிரியம் என நாயகனின் சந்தோஷ நட்களுக்கு உலை வைக்கிறது, மூன்று இளைஞர்கள் கூட்டணி. திடீரென்று இவர்களது வீட்டுக்குள் நுழையும் அந்த மூன்று பேரால், மகிழ்ச்சியான இவர்களது வாழ்க்கை சிதைக்கப்படுகிறது. மாமாவை தாக்கி அவரது மகளை நாசமாக்கும் அந்த கும்பலால் நாயகனின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.

மாமாவையும், உயிர்க் காதலியையும் பறி கொடுக்கும் நாயகன், சட்டத்தின் மூலம் அந்த மூன்று பேருக்கும் தண்டனை வாங்கிக் கொடுக்க முயற்சிக்கிறார். ஆனால், சட்டம் அவர்களுக்கு வளைந்து கொடுத்ததில் தப்பி விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கான தண்டனையை தானே கொடுக்க முடிவு செய்யும் நாயகன் அப்புறமாய் ஆடும் அதிரிபுதிரி ஆட்டம் அதிரடி கிளைமாக்ஸ்.

நாயகனாக அறிமுக நடிகர் ஆதிக் பாபு. முதல் படம் மாதிரி அல்லாமல் இயல்பாக நடித்து ஆச்சரியப்பட வைக்கிறார். சோகத்திலும் ஆக்‌ஷன் காட்சிகளிலும் மாறுபட்ட நடிப்பு, காதலில் கண்ணியம் என ஏற்றுக் கொண்ட கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார்.
நாயகியாக வரும் அர்ச்சனா, காதல்காட்சிகளில் கூடுதலாக கவனம் ஈர்க்கிறார்.

நாயகியின் தந்தையாகவும், நாயகனின் மாமாவாகவும் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், அனுபவமான நடிப்பு மூலம் தன்னை நிறுத்திக் கொள்கிறார்.

காவல்துறை அதிகாரியாக ‘நாடோடிகள்’ அபிநயா. காக்கி உடையில் கம்பீரம் காட்டுகிறார்.

‘ரேணிகுண்டா’ நிசாந்த், ‘போஸ்டர்’ ராஜேந்திரன், அருள் டி.ஷங்கர், ராம் கொடுத்த கேரக்டர்களில் நிறைவு.

ஒளிப்பதிவாளர் கே.கோகுலின் கேமரா கூட்டம் நிறைந்த இடங்களில் நம்மையும் இணைத்துக் கொள்வது தனி அழகு.
இசையமைப்பாளர் கே.எஸ்.மனோஜ், ‘பனித்துளி பனித்துளி’, ‘தொடுவானம்’ பாடல்களை மனதில் இடப்பெயர்ச்சி செய்து விடுகிறார்.
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கும் இயக்குநர் டிஸ்னி, பெண்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் மோசமாகி வருவதை அழுத்தமாக பதிவு செய்து சமூக அக்கறையுடன் கூடிய தனது பங்களிப்பை நிறைவேற்றி இருக்கிறார்.

‘குற்றம் புரிந்தால்’ அக்கரை வரை செல்லும் அக்கறை படைப்பு.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/1159425-cni23feb2506.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/1159425-cni23feb2506-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்ஆதரவு காட்டும் மாமா மீது அன்பு, , அவர் மகள் மீது பிரியம் என நாயகனின் சந்தோஷ நட்களுக்கு உலை வைக்கிறது, மூன்று இளைஞர்கள் கூட்டணி. திடீரென்று இவர்களது வீட்டுக்குள் நுழையும் அந்த மூன்று பேரால், மகிழ்ச்சியான இவர்களது வாழ்க்கை சிதைக்கப்படுகிறது. மாமாவை தாக்கி அவரது மகளை நாசமாக்கும் அந்த கும்பலால் நாயகனின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. மாமாவையும், உயிர்க் காதலியையும் பறி கொடுக்கும் நாயகன், சட்டத்தின் மூலம் அந்த மூன்று...