கடத்தி வரப்பட்ட ஒரு பெண்ணை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ய, அதை ஒருவன் வீடியோ எடுப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. அதற்குப் பின்னால் பெண்களை இப்படி தங்கள் மாய வலையில் வீழ்த்தும் ஒரு கும்பலே இயங்கி வருவது தெரிய வருகிறது.
இந்நிலையில் கபடி விளையாட்டு வீரரான நாயகன் இஷானின் காதலி பிரணாலியின் அறைத் தோழி தற்கொலைக்கு முயல, அதை பிரணாலி விசாரிக்கும்போது இதே பலாத்கார கும்பலின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் அவள் அந்த முடிவை எடுத்தது தெரிய வர…

இப்போது இஷான் அந்த கும்பலை எதிர் கொள்ளத் தயாராகிறார். ஆனால்அந்த கும்பலின் தலைவன் செல்வாக்கு மிக்க முக்கிய புள்ளியாக இருக்க… மலையுடன் மோதி இஷான் தலையை உடைத்துக் கொண்டாரா? அல்லது மலை பெயர்ந்ததா? என்பது இடியும் மின்னலுமான திரைக்கதை.
அறிமுக நாயகன் இஷான், கதாபாத்திரத்திற்கு ஏற்ற கச்சிதமான தேர்வு. ஆறடி உயரத்தில் சண்டைக்காட்சிகளில் அதிரடிப்பவர், காதல், சென்டிமென்ட் காட்சிகளிலும் சொல்லியடிக்கிறார், கில்லி. தமிழ் சினிமாவுக்கு நல்வரவு.
நாயகியாக வரும் பிரனாலி குடும்பப்பாங்கான தோற்றத்தில் கவர்கிறார்.
வில்லனாக டேனியல் பாலாஜி. வழக்கம் போல் தனது அதிரடியான வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.
ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கிய விதத்தில் விஷ்ணுஸ்ரீயின் கேமரா அதிரடிக்கு உத்தரவாதம்
ஜேம்ஸ் வசந்தனின் இசையில் பாடல்கள் சுகமான ராகம்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான சம்பவங்களை காட்சிகளாக்கியிருக்கும் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர், பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் படத்தை இயக்கியிருக்கிறார். பெண்களின் பயம் தான் அவர்களின் முதல் எதிரி என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

அரியவன், அபத்தங்களை களையெடுக்க வந்த அபூர்வன்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/gateway-1024x504.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/gateway-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்கடத்தி வரப்பட்ட ஒரு பெண்ணை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ய, அதை ஒருவன் வீடியோ எடுப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. அதற்குப் பின்னால் பெண்களை இப்படி தங்கள் மாய வலையில் வீழ்த்தும் ஒரு கும்பலே இயங்கி வருவது தெரிய வருகிறது. இந்நிலையில் கபடி விளையாட்டு வீரரான நாயகன் இஷானின் காதலி பிரணாலியின் அறைத் தோழி தற்கொலைக்கு முயல, அதை பிரணாலி விசாரிக்கும்போது இதே பலாத்கார கும்பலின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல்...