சிங்காரவேலன் ஜாமீன் கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செஞ்சிருந்தார். இதற்கு எதிப்பு தெரிவிச்சு இடையீட்டு மனுதாரராக நடிகர் விமலும் மனு தாக்கல் செய்தார். அதில், தொடர்ந்து போலி ஆவணங்களை பயன்படுத்தி தனக்கு எதிராக பொய் புகார்களை அளித்து அவதூறு பரப்பும் வகையில் சிங்காரவேலன் செயல்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் ஆதாரங்களை கலைக்ககூடும் என்ற அடிப்படையில் சிங்காரவேலனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என நடிகர் விமல் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது நடிகர் விமலுக்கு எதிராக எந்த வகையிலும் செயல்பட மாட்டேன் எனவும், நடிகர் விமலின் எதிர்காலத்தில் வரும் படங்களுக்கு தொந்தரவு அளிக்க மாட்டேன் எனவும் நடிகர் விமல் இடம் பெற்ற ஆவணங்களை திருப்பித் தருவதாகவும், அவர் மீது கொடுக்கப்பட்ட புகார்களை திரும்பப் பெறுவதாகவும் சிங்காரவேலன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சிங்காரவேலன் வாக்குறுதிகளாக தாக்கல் செய்த மனுவை ஏற்று நடிகர் விமல் சமாதானமாக செல்வதாக கூறி, மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கௌதமன், முதற்கட்டமாக நடிகர் விமல் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொண்டு சிங்காரவேலனுக்கு ஜாமீன் தர முடியாது என உத்தரவில் தெரிவித்துள்ளார். இருப்பினும் சிங்காரவேலன் சில வாக்குறுதிகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நடிகர் விமல் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் சில நிபந்தனைகளை விதித்து ஜாமீன் தருவதாக நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார். அந்த அடிப்படையில் சிங்காரவேலன் மற்றும் இருவர் 25 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி பிணை பத்திரம் கொடுக்க வேண்டும் எனவும், சிங்காரவேலன் மனுவில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், பிணையில் வெளிவந்த மூன்று நாட்களுக்குள் நடிகர் விமலிடம் பெற்ற ஆவணங்களை திரும்பி ஒப்படைக்க வேண்டும் எனவும், நடிகர் விமலுக்கு எதிராக கொடுக்கப்பட்ட பொய் புகார்களை ஏழு நாட்களுக்குள் திரும்பப்பெற வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதி, அதுவரை விசாரணை அதிகாரி முன்பு தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திடவும் உத்தரவிட்டார்.

மேலும் இந்த நிபந்தனைகளை ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றாவிட்டால் கொடுக்கப்பட்ட ஜாமீன் தானாக ரத்தாகிவிடும் எனக்கூறி, தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவு பிறப்பிச்சார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/05/NTLRG_150905102704000000.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/05/NTLRG_150905102704000000-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்சிங்காரவேலன் ஜாமீன் கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செஞ்சிருந்தார். இதற்கு எதிப்பு தெரிவிச்சு இடையீட்டு மனுதாரராக நடிகர் விமலும் மனு தாக்கல் செய்தார். அதில், தொடர்ந்து போலி ஆவணங்களை பயன்படுத்தி தனக்கு எதிராக பொய் புகார்களை அளித்து அவதூறு பரப்பும் வகையில் சிங்காரவேலன் செயல்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் ஆதாரங்களை கலைக்ககூடும் என்ற அடிப்படையில் சிங்காரவேலனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என நடிகர் விமல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த...