சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் முதல்பாகம் தயார் செப்டம்பர் 30-ந்தேதி திரைக்கு வருகிறது

அமரர் கல்கியின் பகழ் பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அதே பெயரில் திரைப்படமாக உருவாக்கி வருகிறார், இயக்குனர் மணிரத்னம்.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன்-1” செப்டம்பர் 30-ந் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழுவினர அறிவித்துள்ளனர்.
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதை என்பதால், படம் மீதான எதிர்பார்ப்பு இப்போதே எகிறியிருக்கிறது. சோழப் பேரரசின் பொற்காலமாக திகழ்ந்த காலகட்டத்தை தத்ரூபமாக திரையில் காட்ட ஆயிரக்கணக்கான கலைஞர்கள் உழைத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *