சினி நிகழ்வுகள்

அர்ஜூனின் அப்பாவாக நடிக்கும் விஷால் அப்பா

GS ARTS சார்பில் G.அருள் குமார் வழங்க, தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன்-ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வருகிறது, புதிய க்ரைம் திரில்லர் படம். இந்த படத்தில், நடிகர் விஷாலின் தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி நடிக்கிறார். கதைப்படி இவர் அர்ஜூனின் தந்தையாக வருகிறார். நடிகர் கதிரின் தந்தை லோகுவுக்கும் இதில் கனமான வேடம்.

இப்படம் க்ரைம், திரில்லர் விசாரணை வகையை சேர்ந்த படமென்றாலும், படத்தில் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் முக்கியமாக அப்பா-மகன் உறவு ஆழமாக சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இப்படத்தில் அர்ஜூன்-ஜி.கே.ரெட்டி இருவரது பாத்திரங்களும் சிறப்பாக இருக்குமென்று படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் கதிர் தந்தை லோகு, படத்தில் கதையின் திருப்புமுனைக்கு உதவும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இரு பாத்திரங்களும் படத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால், இப்பாத்திரங்களை சிறப்பாக கையாளும் சிறந்த நடிகர்களை தேர்வு செய்ய வேண்டுமென படக்குழு முடிவு செய்திருந்தது. பல கட்ட தேர்வுகளுக்கு பிறகே, ஜி.கே. ரெட்டி & லோகு ஆகியோரை இப்பாத்திரங்களுக்காக படக்குழு தேர்வு செய்துள்ளனர்.
அர்ஜூன்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. விரைவில் அனைத்து நடிகர்களும் பங்கு கொள்ளக்கூடிய இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது. ஒரு பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு உருவாகும் ஒரு க்ரைம் -த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதையான இது, மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் அமைந்துள்ளது.
இப்படத்தின் தொழில் நுட்ப குழுவில் பரத் ஆசீவகன் (இசை), லாரன்ஸ் கிஷோர் (எடிட்டர்), சரவணன் அபிமன்யு (ஒளிப்பதிவாளர்), அருண் சங்கர் துரை (கலை இயக்குனர்), விக்கி (ஸ்டண்ட் மாஸ்டர்), சுரேஷ் சந்திரா(மக்கள் தொடர்பு) பணிகளை செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *