புதுமுகங்களின் அணிவகுப்பில்
உருவாகி இருக்கும்
குற்றப் பின்னணி கொண்ட பழிவாங்கும் கதை
“பிறர் தர வாரா ”
புது இயக்குனர் அறிமுகம் |

சிட்டியில் குழந்தைகள் கடத்தல் தீவிரமாகிறது. குழந்தைகளை கடத்துவது யார்? இதன் பின்னனியில் யார் இருக்கிறார்கள்? என்பதை கண்டறிந்து கைது செய்ய ஸ்பெஷல் ஆபிசரை நியமிக்கிறார் கமிஷனர் . ஸ்பெஷல் ஆபிசர் துப்பு துலக்குகிறார். இதன் பின்னால் இருக்கும் பெயரை கேட்டதும் ஆபீசர் அதிர்ச்சி அடைகிறார்.” யார் அவர்கள் ? எதற்காக இதில் ஈடுபட்டார்கள் என்பதை கேட்டதும் இன்னும் அதிர்ச்சி அவருக்கு அதிகமாகிறது ” இப்படி விறுவிறுப்பாக செல்லும் கதைக்கு
ஏ.ஆர்.காமராஜ் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை எழுதி நறுக்கான வசனம் தீட்டி தனது ஏ.ஆர்.கே.கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து ஸ்பெஷல் ஆபீசர் வேடமேற்று அருமையாக இயக்கி உள்ளார்.

சம்பத் ராம், ருத்ரன், அபு, ஹரி, புருஷ் , சேகர், ராஜன், நிவேதா லோகஸ்ரீ, இன்னும் பலர் நடித்துள்ளனர்.

கோவை, பொள்ளாச்சி, கோபி, உடுமலை, ஊட்டி ஆகிய ஊர்களில் இதுவரை படப்பிடிப்பு நடைபெறாத இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

டேவிட் – கோகுல் இருவரும் ஒளிப்பதிவையும், ஹரிபிரசாத் படத்தொகுப்பையும், ஜாக் வாரியர் இசையையும் கவனித்துள்ளனர்.

திரையரங்குகள் திறந்ததும் திரையிட தயாரிப்பாளரும் இயக்குனருமான ஏ.ஆர்..காமராஜ் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/10/IMG-20201003-WA0041.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/10/IMG-20201003-WA0041-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்புதுமுகங்களின் அணிவகுப்பில் உருவாகி இருக்கும் குற்றப் பின்னணி கொண்ட பழிவாங்கும் கதை 'பிறர் தர வாரா ' புது இயக்குனர் அறிமுகம் | சிட்டியில் குழந்தைகள் கடத்தல் தீவிரமாகிறது. குழந்தைகளை கடத்துவது யார்? இதன் பின்னனியில் யார் இருக்கிறார்கள்? என்பதை கண்டறிந்து கைது செய்ய ஸ்பெஷல் ஆபிசரை நியமிக்கிறார் கமிஷனர் . ஸ்பெஷல் ஆபிசர் துப்பு துலக்குகிறார். இதன் பின்னால் இருக்கும் பெயரை கேட்டதும் ஆபீசர் அதிர்ச்சி அடைகிறார்.' யார் அவர்கள் ? எதற்காக இதில்...