எவன் சொன்னான் எனக்கு கல்யாணம்ன்னு – நடிகை அனுஷ்கா
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த பாகமதி திரைப்படத்திற்கு பிறகு நடிகை அனுஷ்கா ஒன்றரை ஆண்டு எந்த படத்திலும் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பிறகு தற்போது நடிகர் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோருடன் இணைந்து நிசப்தம் என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் இவருடைய திருமணத்தைப்பற்றிய செய்தி வாரா வாரம் விதவிதமாக வந்துக்கொண்டே இருக்கும். ஒரு வாரத்தில் பெரிய தொழிலதிபர், மறு வாரத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் என்று மாப்பிளையை மட்டும் பத்திரிகையாளர்கள் மாற்றிக்கொண்டே கொண்டே வந்தனர். இதனால் இவரும் இவருடைய பெற்றோர்களும் மனஉலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் கோபமுற்ற அனுஷ்கா “எவன் சொன்னான் எனக்கு கல்யாணம்ன்னு…! புதுசா ரெண்டு படத்துல கமிட் ஆகிருக்கேன்…!” என்று ஆவேசமாக கூறியுள்ளார். ஒன்று கவுதம் வாசுதேவ் மேனனின் திரைப்படம், மற்றொன்று தெலுங்கு இயக்குனரின் காதல் திரைப்படம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அனுஷ்கா தற்போது கவுதம் வாசுதேவ் மேனனின் திரைப்படத்திற்காக உடல் பருமனை குறைத்துவருவது குறிப்பிடத்தக்கது.
https://chennairoyalcinema.com/?p=6631https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/03/as.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/03/as-150x150.jpgசினிமா செய்திகள்நடிகைகள்தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த பாகமதி திரைப்படத்திற்கு பிறகு நடிகை அனுஷ்கா ஒன்றரை ஆண்டு எந்த படத்திலும் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பிறகு தற்போது நடிகர் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோருடன் இணைந்து நிசப்தம் என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இவருடைய திருமணத்தைப்பற்றிய செய்தி வாரா வாரம் விதவிதமாக வந்துக்கொண்டே இருக்கும். ஒரு வாரத்தில் பெரிய தொழிலதிபர், மறு வாரத்தில் பிரபல கிரிக்கெட்...rcinema saravananv83@gmail.comAdministratorChennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்
Leave a Reply