தேசிய தலைவர் — திரை விமர்சனம்
சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்து கதை தொடங்குகிறது. ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டு வரும் முத்துராம லிங்க தேவர், ராமநாதபுரம் சேதுபதி மன்னரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். அது சமயத்தில் ஆங்கிலேயே அரசின் கை ரேகை சட்டத்தை எதிர்த்து போராடுகிறார்.
இதற்கு இடையே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அவரது வழியில் பயணி ப்பவர், கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் இருந்து விலகி, பார்வேர்ட் பிளாக் கட்சியில் இணைகிறார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் முத்துராமலிங்க தேவர், தென் மாவட்டங்களில் பலம் வாய்ந்த தலைவராக உருவெடுக்கிறார்.
முத்துராமலிங்க தேவரின் வளர்ச்சியி ல் அச்சமடையும் காங்கிரஸ் தலைமை அவரை மீண்டும் காங்கிரஸில் இணைய வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. அது முடியாமல் போக, அவர் மீது சாதி வெறியர் என்ற அடையாளத்தை குத்த முயற்சிக்கிறது. அவரோ சாதி சமய பாகுபாடு இன்றி எல்லாரையும் நேசிப்பதால் அந்த முயற்சி பலனற்று போகிறது. இதற்கிடையில், சாதி மோதல்களை தடுப்பதற்கான அரசின் அமைதி பேச்சுவார்த்தையின் போது, தலித் சமூக மக்களின் தலைமையாக இயங்கிய இமானுவேல் சேகரன், மர்ம கும்பலால் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை வழக்கில் முத்துராமலிங்க தேவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்
தன்னை நிரபராதி என்று நிரூபிப்பதற்காக சட்ட போராட்டத்தில் ஈடுபடும் முத்துராமலிங்க தேவர், அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா ?, அதன் பிறகு அவர் வாழ்க்கை என்னவானது, என்பது தான் படத்தின் கதை.
முத்துராமலிங்க தேவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெ.எம்.பஷீர், தோற்றம், நடிப்பு, உடல் மொழி, வசன உச்சரிப்பு என அதன் நடிப்பின் ஒவ்வொரு அசைவுகளிலும் முத்துராமலிங்க தேவரை கண் முன் கொண்டு வருகிறார்.
ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரது கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் உருவ ஒற்றுமையில் கச்சிதமாக பொருந்திப் போக, பெருந்தலைவர் காமராஜர்
வேடத்துக்கு மட்டும் ஏனோ தானோ என்று என்று ஒரு ஆளை பிடித்துப் போட்டு இருக்கிறார்கள்.
இயக்குநர் பாரதிராஜா, ராதா ரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் குறைவான காட்சிகள் வந்தாலும், நெஞ்சில் நின்று போகிறார்கள்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களும் பின்ன ணி இசையும் படத்தின் கூடுதல் ஜீவனாகி விடுகிறது.
ஒளிப்பதிவாளர் அகிலன், சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டம் மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகான காலகட்டம் என பீரியட் படத்திற்கு ஏற்ப ஒளி மற்றும் வண்ணங்களை கையாண்டு இந்த பயோபிக் படத்திற்கு உயிரூட்டி இருக்கிறார்.
திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.அரவிந்தராஜ்.
படத்தின் முதல் பாதி டாக்குமெண்டரி போல் பயணித்தாலும், இரண்டாம் பாதியில் சரியான களத்தில் பயணித்து அதை சரி செய்து விடுகிறார்.
