திரை விமர்சனம்

மரியா – திரை விமர்சனம்

கிறித்துவ மத பெண் துறவியை மையமாக வைத்து சர்ச்சைக்குரிய கதை யை சொல்லியிருக்கிறார்கள்.

சாய்ஸ்ரீ பிரபாகரன், பெண் துறவியாக இருக்கிறார்.துறவு வாழ்க்கையில் இருந்து வெளியேறி உறவு வாழ்க்கைக்குள் நுழைய விரும்புகிறார். தன் விருப்பத்தை தாயிடம் சொல்லும் போது, அவரோ துறவு வாழ்க்கை என்பது எல்லா பெண்களுக்கும் அமையாது. கடவுளால் அதற்கெ ன்று தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் மட்டுமே அதில் நுழைய முடியும். அதனால் அது பற்றி இனி மறுபேச்சு பேசாதே என்று துரத்தி விடுகி றார்

வெளியூர் வந்து ஒன்று விட்ட சகோதரி தங்கி இருக்கும் ஹாஸ்டலுக்கு வருகிறாள் துறவி.
தங்கையும் இன்னொரு தோழி யும் ஆளுக்கு ஒரு ஆண் துணையை தேர்ந்தெடுத்து அங்கே லிவிங் டுகெ தராக வாழ்ந்து வருகிறார்கள். இதுபற்றி துறவி தன் தங்கையிடம் அதிர்ச்சியுடன் கேட்க…
அவ்ளோ சர்வ சாதாரணமாக, ‘ஒன்றாக வேலை பார்க்கிறோம். அப்படியே ஒன்றாக தங்கி இருந்து பிடித்த வாழ்க்கையை வாழ்கிறோம். ஏதேனும் கருத்து வேறுபாடு வந்தால் பிரிந்து விடுவோம். இன்றைய நகர வாழ்க்கையில் இது சகஜம்’ என்று சொல்ல, தூக்கி வாரி போடுகிறது துறவிக்கு.
பெண் துறவியும் இயல்பான வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட நிலையில், கட்டாயமாக அவருக்கு குடும்பத்தினரால் துறவி மகுடம் சூட்டப்படுகின்றது. இப்போது உறவுப் பெண் வாழும் வாழ்க்கையை பார்த்த பிறகு துறவிக்குள்ளும் சராசரி பெண்ணின் வாழ்க்கையை வாழ ஆசை வருகிறது. இந்த ஆசையை துறவியின் தங்கையுடன் சேர்ந்து வாழும் அவள் காதலன் புரிந்துகொண்டு சராசரி வாழ்க்கைக்கு அவளை தயார் செய்கிறான். தடம் மாறிய காதலன். தடுமாறிய துறவி இருவரின் நெருக்கத்தையும் பார்த்த துறவியின் தங்கை என்ன முடிவெடுக்கிறாள்?, இயல்பு வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட பெண்ணின் துறவு வாழ்க்கை முடிவுக்கு வந்ததா என்பது கதை.

படம் மொத்தமும் தன் மீதுதான் இருக்கிறது என்பதை உணர்ந்து பொறுப்புடன் நடித்திருக்கிறார் துறவியாக வரும் சாய்ஸ்ரீ பிரபாகரன்.
சர்ச்சைக்குரிய வகையில் அவரது பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அதில் நேர்த்தியாக நடித்து தன் கேரக்டருக்கு நடிப்பால் நியாயம் செய்து விடுகிறார்.

சாய்ஸ்ரீ பிரபாகரனின் உறவினராக நடித்திருக்கும் சிந்து குமரேசன் அவருடைய காதலராக வரும் விக்னேஷ் ரவி, அவரின் அம்மாவாக வருபவர் உட்பட
தங்கள் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

மதரீதியில் இருந்து நாயகியை பிரிக்கும் இடத்தில் வேடத்தில் பாவெல் நவகீதன் வந்து போகிறார். அரவிந்த் கோபால கிருஷ்ணன், பரத் சுதர்ஷன் இசையமைத்திருக்கிறார்கள்.பின்னணி இசையே பாதிக் கதை சொல்லி விடுகிறது. ஒளிப்பதிவாளர் மணிஷங்கர்.ஜி
யின் கேமரா காட்சிகளோடு நம்மை நெருக்கமாக்கி விடுகிறது.

ஹரி கே.சுதன் எழுதி இயக்கியிருக்கிறார்.ஒரு பெண் துறவியின் உண்மையான உணர்வைச் சொல்கிறேன் என்று தொடங்கி ஒரு மதத்தின் மீது கல்லெ றியும் வேலையை செய்திருக்கிறார்.அதற்காக சில மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளையும் வைத்திருக்கிறார்.துறவிகள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்கிற தவறான கருத்தையும் பதிவு செய்திருக்கிறார். வேதாகமத்தில் கடவுளால் சாத்தான் என்று அடையாளம் காட்டப்பட்ட லூசிபர் போன்றவர்களை கடவுள் அவதாரமாக காட்டும் காட்சிகளை தயவு தாட்சண்யமின்றி
தூக்கி இருக்கலாம்.