திரை விமர்சனம்

டூரிஸ்ட் பேமிலி – திரை விமர்சனம்

இலங்கை வல்வெட்டித்துறையில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கள்ளத்தோணியில் தன் குடும்பத்தை அழைத்து வருகிறார் தர்மதாஸ். ஏற்கனவே அங்கே கடன் சுமை, அதோடு உச்சபட்ச விலைவாசி இரண்டும் அந்தக் குடும்பத்தை வாட்டி எடுத்த நிலையில் தமிழகத்துக்கு பிழைக்க வருகிறது அந்த குடும்பம்.

அவர்கள் வந்த தினத்தில் ராமேஸ்வரத்தில் ஒரு குண்டு வெடிப்பு நிகழ… இலங்கையில் இருந்து வந்த தர்மதாஸின் குடும்பத்தினரைச் சந்தேகப்படுகிறது காவல் துறை. அதனால் அவர்களை தீவிரமாக தேடத் தொடங்க…
அந்த இலங்கை குடும்பம் காவல்துறை கண்ணில் சிக்கியதா? தப்பியதா? என்பது படத்தின் பரபரப்பான கிளைமாக்ஸ்.
இலங்கை குடும்பத்தின் தந்தையாக சசிகுமார், தாயாக சிம்ரன், மகன்களாக மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ். இந்தப் பொருத்தமான பாத்திரத் தேர்வே தொடக்கம் முதலே படத்துக்குள் நம்மை இழுத்துக் கொள்கிறது.

அப்பா கேரக்டரில் ரொம்பவே அடக்கி வாசித்துள்ளார் சசிகுமார். அவருக்கும் மூத்த மகன் மிதுனுக்குமான சின்ன சின்ன மோதல்கள் கதை ஓட்டத்தை டெம்போ குறையாமல் பார்த்துக் கொள்கிறது. அதிலும் மகன் தன் காதல் பிளாஷ் பேக்கை தந்தையிடம் சொல்லும் இடத்திலும், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளிலும் படம் சுவாரசியமாகி விடுகிறது.
,சமயம் பார்த்து கதையை திருப்புவது, அவ்வப்போது காமெடித் தோரணம் இதெல்லாம் இளைய மகன் கமலேஷின் கலகல பக்கங்களாகி விடுகிறது.

சிம்ரனின் அண்ணனாக யோகி பாபு தன் தங்கையிடம், இந்தக் குடியிருப்பில் உள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளாதே என்று சொன்ன அடுத்த கணமே குடியிருப்பு பெண்கள் கூட்டமாக சிம்ரனை தேடி வர, அதிர்ச்சியில் தங்கையை பார்த்து,’என்ன சிம்ரன் இதெல்லாம்?’ என்று வடிவேலு கேட்கும் இடத்தில் அரங்கத்தில் எழும் ஆரவாரம் அடங்க வெகு நேரமாகிறது. இன்ஸ்பெக்டர் ராகவனாக பகவதி பெருமாள், ஏட்டாக ரமேஷ் திலக் தங்கள் பாத்திரத்தில் பளிச்.
பகவதி பெருமாள் மகளாக வரும் யோகலக்ஷ்மி, தனது மெச்சூரிட்டி பற்றி மிதுனிடம் பேசும் இடத்தில் அரங்கில் சிரிப்பு சில்லறையாய் சிதறு கிறது.

குடும்ப பஞ்சாயத்தில் அம்மா சிம்ரனின் பாதி நேரம் போய் விடுகிறது. என்றாலும் குடியிருப்பு கொண்டாட்டத் தின் போது சிம்ரனின் சின்ன நடன அசைவுக்கே தியேட்டர் தெறிக்கிறது.மூத்த காதல் தம்பதிகளாக வரும் இளங்கோ குமரவேல் – ஸ்ரீஜா ரவி சம்பந்தப்பட்ட காட்சிகள் காதல் எப்போதுமே இளமையானது தான் என்பதை உணர வைக்கின்றன. சசிகுமாருக்கு மீண்டும் வேலை கொடுக்கும் எம்.எஸ். பாஸ்கர் அதற்கு சொல்லும் காரணம் மகத்தானது. சசிகுமாரை கொலை வெறியுடன் தேடும் அந்த வடக்கத்திய இன்ஸ்பெக்டர் பார்வையிலேயே பயமுறுத்தி விடுகிறார்.

ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் சுகமாகவும் பின்னணி இசை காட்சிகளின் உயி ரோட்டமாகவும் அமைந்து படத்தை வேறு லெவலுக்கு கொண்டு போய் விடு கிறது. நம்மைச் சுற்றி வாழும் மனிதர்கள் மீது அன்பை விதைக்கும் நம்பிக்கையை வலுப்படுத்தும் காட்சிகளை இயக்கிய விதத்தில் வர் இயக்குனர் அபிஷன் ஜீவிந் படம் நெடுக மனிதநேயத்தை தூவி விட்டிருக்கிறார். அந்த கிளைமாக்ஸ் தான் படத்தின் ஜீவன் என்பதை உணர்ந்து அங்கேயும் சிக்ஸர் அடித்து விடுகிறார்.

இந்த டூரிஸ்ட் பேமிலி இனிய பயணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *