மலையாளத்திலும் தமிழிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட ‘கேங்க்ஸ்டர்’ படம் இது. மலையாளப் படமான ‘ஓட்டு’ வெளியாகிவிட்ட நிலையில், தமிழ் பதிப்பான ரெண்டகம் இரண்டு வார இடைவெளியில் வெளியாகியிருக்கிறது.

வேலையில்லாமல் சுற்றித் திரியும் குஞ்சாக்கோ போபனுக்கு தனது காதலி ஈஷா ரெப்பாவுடன் ஸ்வீடன் சென்று செட்டிலாகி விட ஆசை. அதற்கான பணமில்லாமல் தவிக்கும் அவரை ஒரு மர்ம கும்பல் அணுகுகிறது. பழைய நினைவில்லாமல் இருக்கும் தாவூத் (அரவிந்த் சாமி) என்பவரிடம் பழகி, அவரது நினைவை மீட்டெடுக்க வேண்டும் என்ற வேலையைக் கொடுக்கிறது. காதலியுடனான ஸ்வீடன் கனவில் இந்த திட்டத்துக்கு ஒப்புக்கொள்ளும் குஞ்சக்கோவால் தாவூதின் பழைய நினைவுகளை மீட்டெடுக்க முடிந்ததா? என்பது பரபர விறுவிறு திரைக்கதை.
மலையாள நடிகர் குஞ்சக்கோ போபனுக்கு தமிழில் இது முதல் படம். வாரி சுருட்டிய தலைமுடி, ஷேப் வைக்கப்பட்ட தாடி என வந்து கேரக்டருக்குள் புதைந்து போகிற வித்தையை சிரமமின்றி செய்து விடுகிறார். இறுதிக்காட்சியில் மாஸ் கூட்டுவது, ‘மங்கத்தா’ ஸ்டைலில் ஒரு காட்சியில் அதகளம் செய்வது என மலையாள மண்ணின் சாயலிலிருந்து விடுபட்டு கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் அரவிந்த்சாமி.
சந்தர்ப்பவாத காதலி கேரக்டரில் வந்து குஞ்சக்கோ போபனுக்கு கிளைமாக்சில் அதிர்ச்சி கொடுக்கிற ஈஷா ரெப்பா, இது மாதிரி கேரக்டரில் இனி ஒரு ரவுண்டு வருவாருப்பா…
ஜாக்கி ஷெராஃப், ஆடுகளம் நரேன், வ.ச.ஜெயபாலன் கதைக்கு தேவையான பங்களிப்பில் தங்கள் பாத்திரத் தேர்வை நியாயப்படுத்துகிார்கள்.
இரண்டு ஹீரோக்கள் இருந்தாலும் கதையும், திரைக்கதையும் தான் படத்தின் முக்கிய ஹீரோக்கள்.
முதல் பாதியில் மெதுவாக பயணிக்கும் கதை, இரண்டாவது பாதியில் எடுக்கும் வேகமும், திருப்பங்களும் சற்றும் எதிர்பாராத இனிய அதிர்ச்சி .
ஒளிப்பதிவும் இசையும் இந்த திகில் கதைக்கு திருப்புமுனையாக அமைய, இயக்கி இருக்கிறார், பௌனி.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/09/download.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/09/download-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்திரை விமர்சனம்மலையாளத்திலும் தமிழிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட 'கேங்க்ஸ்டர்' படம் இது. மலையாளப் படமான ‘ஓட்டு' வெளியாகிவிட்ட நிலையில், தமிழ் பதிப்பான ரெண்டகம் இரண்டு வார இடைவெளியில் வெளியாகியிருக்கிறது. வேலையில்லாமல் சுற்றித் திரியும் குஞ்சாக்கோ போபனுக்கு தனது காதலி ஈஷா ரெப்பாவுடன் ஸ்வீடன் சென்று செட்டிலாகி விட ஆசை. அதற்கான பணமில்லாமல் தவிக்கும் அவரை ஒரு மர்ம கும்பல் அணுகுகிறது. பழைய நினைவில்லாமல் இருக்கும் தாவூத் (அரவிந்த் சாமி) என்பவரிடம் பழகி,...