பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் உடல் நலம் குன்றிய நிலையில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை முடிந்த நிலையில், பூரணமாக குணமடைந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் டைரக்டர் டி.ராஜேந்தருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது தெரியவர, அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இதையடுத்து நடிகர் சிலம்பரசன் தனது படப்பிடிப்புக்களை ரத்து செய்து விட்டு தந்தையை அழைத்துக் கொண்டு அமெரிக்கா போனார்.

அமெரிக்க மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது முழுமையாக டி.ராஜேந்தர் குணமடைந்துள்ளார். மருத்துவர்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென அறிவுறுத்தியதால், அங்கேயே ஒரு மாதம் தங்கலாம் என குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். இதுவரையிலும் உடனிருந்து, அனைத்து பணிகளையும் முன்னின்று கவனித்துகொண்ட நடிகர் சிலம்பரசன், தன் தந்தை ஒரு மாதம் வெளிநாட்டில் ஓய்வெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து விட்டு, தற்போது படப்பிடிப்பிற்காக சென்னை திரும்பியுள்ளார்.
பரிபூரண நலம் பெற்ற நிலையில், அமெரிக்காவில் தற்போது முழு ஓய்வெடுத்து வருகிறார்,டி.ராஜேந்தர்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/07/775dfea5-2891-41df-9e16-79dec5014af8.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/07/775dfea5-2891-41df-9e16-79dec5014af8-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் உடல் நலம் குன்றிய நிலையில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை முடிந்த நிலையில், பூரணமாக குணமடைந்துள்ளார். சில தினங்களுக்கு முன் டைரக்டர் டி.ராஜேந்தருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது தெரியவர, அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்....