பிரபல கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி, தற்போது தனது பரம்வா ஸ்டுடியோஸ் சார்பில் ‘777 சார்லி’ என்ற படத்தை தயாரித்து நாயகனாகவும் நடித்துள்ளார். ராஜ் பி ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி, டேனிஷ் சைட் மற்றும் பாபி சிம்ஹா முக்கிய கேரக்டர்களில் இடம் பிடித்துள்ளனர்.
ஒரு நாய்க் குட்டிக்கும், தர்மா என்ற கதாப்பாத்திரத்திற்கும் இடையே இருக்கும் உணர்வுப்பூர்வமான அன்பை சொல்லியிருக்கும் இப்படத்தை ஜி.எஸ்.குப்தாவுடன் ரக்‌ஷித் ஷெட்டி இணைந்து தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் கிரண்ராஜ்.கே இயக்கியுள்ள இப்படம் வரும் 10-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த படத்தை தமிழில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் வெளியிடுகிறது. தெலுங்கில் நடிகர் ராணாவும், மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜூம் வெளியிடுகிறார்கள்.
படத்தின் தமிழ் வெளியீட்டை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில், படத்தின் ஹீரோ ரக்‌ஷித் ஷெட்டி, இயக்குநர் கிரண்ராஜ், படத்தை வெளியிடும் ஸ்டோன் பென்ஞ் நிறுவனம் சார்பில் கார்த்திக் சுப்புராஜ், கார்த்திகேயன், பவன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய கார்த்திக் சுப்புராஜ், ”கொரோனாவிற்கு பிறகு, இப்போது தான் சினிமா மீண்டு வருகிறது. எனக்கு எப்போதும் கன்னடத் துறையுடன் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். ரக்‌ஷித் ஷெட்டி படங்களை முன்பே பார்த்துள்ளேன். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், இப்படத்தின் ஒரு 15 நிமிட காட்சியை பார்த்தேன். கேங்ஸ்டர் படமென நினைத்த எனக்கு பெரும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். இந்த படம் ஒரு பெரிய உணர்வை எனக்கு கொடுத்தது. நான் இந்த படத்தை தமிழில் வெளியிட வேண்டும், அதில் நான் இருக்க வேண்டும் என விரும்பினேன். இந்த படத்தின் வெற்றி மீது மிக உறுதியாய் இருக்கிறேன். இந்த படம் எனக்கு மிகப்பெரிய திருப்தியை கொடுத்த படம். இயக்குனர் கிரண்ராஜ்க்கு இது முதல் படம் என்பது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. நாயை நடிக்க வைப்பது கஷ்டமான விஷயம். நான் இயக்கிய பீட்சா படத்தில் கூட நாய் சம்பந்தப்பட்ட காட்சி இருந்தது. ஆனால் அதை எடுக்க முடியாமல் தூக்கி விட்டோம். இப்படத்தை எப்படி எடுத்தார்கள் என தெரியவில்லை.

இந்த படத்தின் கதை நிச்சயமாக கூறப்பட வேண்டிய கதை. இந்த படம் பார்த்த பின்னர் வாழ்க்கை மேல் ஒரு நம்பிக்கை வரும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை. படம் பார்த்துவிட்டு கூறுங்கள்” என்றார்.
ஸ்டோன் பெஞ்ச் கார்த்திகேயன் பேசுகையில், “இந்த படத்தை எங்களுக்கு போட்டுக் காட்டிய போது பிரமித்து போனோம். திரைப்படங்கள் மீது பெரிய காதல் இருந்தால் தான் இப்படி எடுக்க முடியும். நாங்கள் இந்த படத்தை பார்த்தவுடன் வெளியிட விரும்பினோம். எங்களுக்கும் இந்த படம் பெரிய உத்வேகத்தை கொடுத்தது. ரக்‌ஷித் ஷெட்டி, இயக்குனர் கிரணுக்கு வாழ்த்துகள். ஒரு நாயை இப்படி நடிக்க வைத்தது பெரிய சவாலான விஷயம்” என்றார்.
இயக்குநர் கிரண்ராஜ் பேசுகையில், “நான் செல்லப் பிராணி விரும்பி. அதனால் தான் இந்த கதையை தேர்ந்தெடுத்தேன். இந்த படத்தில் சவால்கள் நிறைய இருக்கும் என தெரியும். இருந்தாலும் பரவாயில்லை என்று தான் இந்த படத்தை துவங்கினோம். ரக்‌ஷித் ஷெட்டி கதையை கேட்டு, நாம் கண்டிப்பாக இந்த படத்தை செய்வோம் என கூறினார். பட்ஜெட் பற்றி கவலைப்படாமல் கதையை உருவாக்கு என ரக்‌ஷித் ஊக்கமளித்தார். நடிகர்கள் ரக்‌ஷித், ராஜ், சங்கீதா என பலரும் 3 வருடங்களை இந்த படத்துக்காக கொடுத்துள்ளனர். கன்னடம் போல் மற்ற மொழிகளிலும் திறமையான ஆட்களிடம் இந்த படத்தை கொடுக்க வேண்டும் என விரும்பினோம். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் படத்தை வெளியிட முன் வந்தார். அது எங்களுக்கு உத்வேகம் அளித்தது. டப்பிங் என்று வரும் போது, தமிழ் டப்பிங் குழு மிகத் திறமையானவர்கள், தமிழ் டப்பிங் கலைஞர் சேகர், ஹீரோவை விட சிறப்பாக பேசியுள்ளார். இந்த கதையில் எனக்கு இருந்த தெளிவு, தயாரிப்பாளருக்கும் இருந்தது. இந்த படத்தை நீங்கள் தமிழில் பார்த்தால், இதை டப்பிங் படம் என்று கூறமாட்டீர்கள், நேரடி தமிழ் படம் என்று கூறுவீர்கள். இந்த படத்தில் நடித்த நாயை(சார்லி) நாங்கள் பல இடங்களில் தேடி தேர்ந்தெடுத்தோம். கொண்டிருந்தோம்.” என்றார்.
நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், “படம் சிறிய பட்ஜெட் என நினைத்தேன், ஆனால் பெரிய பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். இந்த நாய் (சார்லி) ஒரு பெரிய நடிகனாய் நடித்துள்ளான். படத்தின் காட்சிகளில் அது கொடுத்த உணர்வுகள் அபாரமாக உள்ளது. 777 சார்லி ஒரு சிறந்த கதையம்சம் கொண்ட படம். ஸ்டோன் பெஞ்ச் மூலமாக இந்த படம் வெளியாவது எனக்கு மகிழ்ச்சி. அவர்கள் நல்ல படங்களை தவற விடமாட்டார்கள். இந்த படம் தமிழுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். ரக்‌ஷித் சாருடைய அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன்” என்றார்.

நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி பேசுகையில், “இந்த படம் எனக்கு மிகவும் நெருக்கமான சிறப்பான படைப்ப . சார்லி 777 என் வாழ்க்கையில் பல விஷயங்களை மாற்றியது. 1 1/2 வருடத்திற்கு முன்னரே படம் முடிந்து விட்டது. நான் இந்த படத்தை தயாரித்த நேரத்தில் படத்தை ஒடிடிக்கு அனுப்பலாம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் படத்தை முழுமையாக பார்த்த பிறகு, என்ன நடந்தாலும் படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டும் என முடிவு செய்தேன். படத்தை பார்த்த பிறகு கிடைக்கும் அனுபவம் விலை மதிப்பற்றது. எல்லா படங்களும் பான் இந்தியா படங்கள் இல்லை என எங்களுக்கு தெரியும். ஆனால் பான் இந்தியா படமாக மாற அதற்குரிய எல்லா அம்சமும் இந்த படத்தில் இருக்கிறது. இந்த படத்துடன் முதலில் இணைந்த நிறுவனம் ஸ்டோன் பெஞ்ச். எப்பொழுதும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இந்த நிறுவனம் அவர்களுடன் இணைந்தது மகிழ்ச்சி. ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு நன்றி” என்றார்.
சக்தி பிலிம்ஸ் சக்திவேலன் பேசுகையில், “கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை எனக்கு போட்டு காட்டி, இதை வெளியிட வேண்டும் என்றார். இந்த படத்தில் நடித்த நாய்க்கு சிறந்த விலங்கு நடிகருக்கான விருது வழங்க வேண்டும். இந்த படத்தில் ஹீரோவுக்கும், நாய்க்குமான உறவை எப்படி வெளிக்கொண்டு வந்தார்கள் என்று பிரமிப்பாக இருக்கிறது. குழந்தைகளுக்கும், செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கும் இந்த படம் பிடித்தமான ஒன்றாக இருக்கும்” என்றார்.

. படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை நோபின் பால் அமைத்துள்ளார். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவையும், படத்தொகுப்பை பிரதீக் ஷெட்டியும் கையாண்டுள்ளனர்.

மைசூர், பெங்களூரு, சிக்மங்களூர், கோவா, பஞ்சாப், ராஜஸ்தான், காஷ்மீர் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ள ‘777 சார்லி’ தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ஜூன் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/05/97d80c90-198a-4cf1-9a44-ebaed7f091a9-1024x682.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/05/97d80c90-198a-4cf1-9a44-ebaed7f091a9-e1653999920448-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்பிரபல கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி, தற்போது தனது பரம்வா ஸ்டுடியோஸ் சார்பில் ‘777 சார்லி’ என்ற படத்தை தயாரித்து நாயகனாகவும் நடித்துள்ளார். ராஜ் பி ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி, டேனிஷ் சைட் மற்றும் பாபி சிம்ஹா முக்கிய கேரக்டர்களில் இடம் பிடித்துள்ளனர். ஒரு நாய்க் குட்டிக்கும், தர்மா என்ற கதாப்பாத்திரத்திற்கும் இடையே இருக்கும் உணர்வுப்பூர்வமான அன்பை சொல்லியிருக்கும் இப்படத்தை ஜி.எஸ்.குப்தாவுடன் ரக்‌ஷித் ஷெட்டி இணைந்து தயாரித்துள்ளார்....