சினி நிகழ்வுகள்

மும்பையில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச்சிலை திறப்புவிழா

26/12/2021 அன்று மும்பையில் முத்துராமலிங்கத்தேவரின் திருவுருவச்சிலை திறப்பு விழா நடந்தது. தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்கத்தலைவர் பட்டத்தேவர் அவர்களின் தலைமையில் சுபாஷ் சுடலைக்கண்ணு தேவர் அவர்கள் முன்னிலையில் மகாராஷ்டிரா கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு வர்ஷா தாய் ஏக்நாத் கெய்க்வாட் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த விழாவில் மும்பை சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ் செல்வன், பாரதிய பார்வட் பிளாக் தலைவர் முருகன்ஜி, தேவர் ஆய்வாளர் நவமணி தேவர், A.M.மூர்த்தி தேவர், S.பழனி தேவர் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட தேசிய தலைவர் திரைப்படக் குழுவினர்கள் ஜெ.எம்.பஷீர், R. அரவிந்தராஜ், ,A.M.சௌத்ரி ஆகியோர் கௌரவிக்கப்பட்டார்கள்
விழாவில் மும்பை வாழ் தமிழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *