நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த இந்த ஆண்டிற்கான ‘மார்கழியில் மக்களிசை’ மதுரையில் 18-ந் தேதியும், கோவையில் 19-ந் தேதியும் நடைபெற்று மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னையில் டிசம்பர் 24-ந்தேதி முதல் 31 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இம்மார்கழியில் மக்களிசை ஐந்தாவது நாளாக சென்னை கிருஷ்ணகான சபாவில் கோலாகலத் திருவிழாவாக ‘கானா பாடல்கள்’ என்ற பெயரில் நடந்தது.
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா பேசுகையில், ‘‘இந்நிகழ்ச்சியில் பாடிய கானா கலைஞர்களை அரசாங்கத்தின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்வேன்” என்றார்.

கவிஞர் கபிலன் பேசுகையில், ‘மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை முதன் முறையாக கிருஷ்ணா கானா சபாவில் நடத்தியதற்காக இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசுகையில், ‘‘மற்ற இசைக்கலைஞர்களை போல இந்த கானா இசைக் கலைஞர்களுக்கும் கலைமாமணி விருது வழங்குவதற்கான முயற்சியை தமிழக அரசிடம் கொண்டு சேர்க்க வேண்டும்’’ என்று கூறியவர், கவிஞர் கபிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி மகிழ்ந்தார்.

மார்கழி மக்களிசையில் கலந்து கொண்ட அனைத்து கானா மக்களிசை கலைஞர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்கள் விருது வழங்கி சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மேலும் நாளை 29/12/2021 தமிழ் இசை சங்கத்தில் நடைபெறும். அனைவரும் வாரீர் அன்போடு அழைக்கிறோம்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/12/bd301433-eb28-4fd4-af20-03f96d3df054-1024x682.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/12/bd301433-eb28-4fd4-af20-03f96d3df054-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த இந்த ஆண்டிற்கான ‘மார்கழியில் மக்களிசை’ மதுரையில் 18-ந் தேதியும், கோவையில் 19-ந் தேதியும் நடைபெற்று மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னையில் டிசம்பர் 24-ந்தேதி முதல் 31 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்மார்கழியில் மக்களிசை ஐந்தாவது நாளாக சென்னை கிருஷ்ணகான சபாவில் கோலாகலத் திருவிழாவாக ‘கானா பாடல்கள்’ என்ற பெயரில் நடந்தது. நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா பேசுகையில்,...