சினி நிகழ்வுகள்

‘‘புலிமுருகன், லூசிபர் படத்துக்கு பிறகு பெரிய வெற்றிப்படம் ‘குரூப்’ தான்…’’ படத்தின் வசனகர்த்தா ஆர்.பி பாலா மகிழ்ச்சி

கேரளாவில் மிகப்பெருமளவில் பேசப்பட்ட குற்றவாளியும், இந்திய அளவில் போலீஸால் தேடப்பட்ட குற்றவாளியுமான ‘குருப்’பின் கதையை மையமாக கொண்டு, இயக்குநர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘குருப்”. மொழி தாண்டி, அனைவரிடமும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இந்த படம் கடந்த நவம்பர் 12 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ..
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் தமிழ் போர்ஷனுக்கு வசனம் எழுதியவர் ஆர்.பி. பாலா. அதோடு படத்தில் மூன்று பாடல்களையும் ஆர்.பி பாலா எழுதியுள்ளார். பிற மொழி மொழிமாற்று வடிவங்களுக்கும் டப்பிங் பொறுப்பேற்றுப் பணிபுரிந்துள்ளார்.

‘புலிமுருகன், லூசிபர்’ படங்களுக்குப் பிறகு இந்த படம் வசூலை வாரி வருகிறது. நாயகன் துல்கர் சல்மான் உள்பட படக்குழுவினர் படத்துக்கு வசனம் எழுதிய பாலாவைப் பாராட்டி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *