வரும் மார்ச் மாசம் 5-ம் தேதி தன்னோட பர்த் டே-யை விமரிசையாகக் கொண்டாட தயாராகி கிட்டு இருக்கா வரலட்சுமி சரத்குமார். அந்த வகையில் தன் பிறந்த நாளை முன்னிட்டு பேட்டிகளும் அளிச்சு வருகிறார். இதில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தன்னையும் வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைச்சாய்ங்க என்ற குற்றச்சாட்டை மீண்டும் முன்வைத்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

இது தொடர்பா வரலட்சுமி சரத்குமார் அளிச்ச பேட்டியில் ‘வாய்ப்பு தருவதற்காகப் படுக்கைக்கு அழைக்கும் பிரச்சனை எனக்கும் வந்துச்சு. ஆனால் அதை நான் வெளியில் கொண்டு வந்துட்டேன். நான் இவை அம்புட்டையும் எதிர் கொண்டிருக்கிறேன். ஆனால் ‘முடியாது’ என்று சொல்லக் கற்றுக் கொண்டேன். சரத்குமாரின் மகள் என்பதைத் தாண்டியும் அந்த பிரச்சனைகள் எனக்கு நடந்துச்சு.

இது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகளும் என்னிடம் இருக்கிறது. எனக்கு வெற்றி தாமதமாகத்தான் கிடைத்தது. ஒப்புக் கொள்கிறேன். சிலர் என்னை ஒதுக்கினார்கள். ஏனென்றால் நான் மிகவும் சரியாக இருக்கிறேன். ஆனாலும் பரவாயில்லை. இன்று நான் 25 படங்களில் நடித்து முடிந்திருக்கிறேன். 25 நல்ல தயாரிப்பாளர்கள், 25 நல்ல இயக்குநர்களோடு பணிபுரிந்துவிட்டு தற்போது என்னுடைய 29வது படத்துக்கு ஒப்பந்தமாகியிருக்கிறேன்.

இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பெண்கள் முதலில் சரி என்று சொல்லிவிட்டு அதன்பிறகு வந்து புகார் செய்து பயனில்லை. முதலிலேயே முடியாது என்று சொல்லுங்கள். இதுதான் நான் சொல்ல விரும்புவது.

இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவிச்சிருக்கார்

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/03/varusarathkumar_88135194_545462416327333_4546216556477814381_n-1024x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/03/varusarathkumar_88135194_545462416327333_4546216556477814381_n-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்நடிகைகள்வரும் மார்ச் மாசம் 5-ம் தேதி தன்னோட பர்த் டே-யை விமரிசையாகக் கொண்டாட தயாராகி கிட்டு இருக்கா வரலட்சுமி சரத்குமார். அந்த வகையில் தன் பிறந்த நாளை முன்னிட்டு பேட்டிகளும் அளிச்சு வருகிறார். இதில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தன்னையும் வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைச்சாய்ங்க என்ற குற்றச்சாட்டை மீண்டும் முன்வைத்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். இது தொடர்பா வரலட்சுமி சரத்குமார் அளிச்ச பேட்டியில் ‘வாய்ப்பு தருவதற்காகப் படுக்கைக்கு அழைக்கும்...