திரை விமர்சனம்

வேடுவன் – இணையத்தொடர் விமர்சனம்

வேடுவன் என்றால் வேட்டைக்காரன் என்று பொருள். ரகசிய போலீஸ் அதிகாரியான கண்ணா ரவிக்கு காவல்துறையின் என்கவுண்டர் லிஸ்ட்டில் இருக்கும் நபர்களை வேட்டையாடுவது தான் அசைன்மென்ட். அதன்படி குறிப்பிட்ட ஏரியாவை தன் கைவசம் வைத்திருந்த ஒரு தாதாவை மாறுவேடத்தில் வந்து போட்டுத் தள்ளுகிறார்.

இந்தப் பட்டியலில் காவல்துறையால் நெருங்க முடியாத தூரத்தில் இருந்த
தாதா ஒருவனை என்கவுண்டர் செய்யும் அடுத்த அசைன்மென்ட் கொடுக்கப்படுகிறது
ஊருக்குள் பெரிய மனிதனாக, மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் மாமனிதனாக அதே நேரம் காவல்துறைக்கு சவாலாக இருக்கும் சஞ்சீவை காலி பண்ண அவர் இருக்கும் ஊருக்கு வருகிறார்.
அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்துக் கொண்டே அந்த தாதாவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறார்.
அப்போதுதான் அந்த தாதாவின் மனைவி தன் கல்லூரிக்கால தோழியின் கணவன் என்பது தெரிய வர… இப்போது நம் நாயகன் காவல்துறை தனக்கிட்ட கட்டளையை நிறைவேற்றினாரா.. அல்லது நட்பு சென் டிமென்ட்டில் தடுமாறினாரா என்பதை
விறுவிறுப்பு குறையாமல் தந்து இருக்கிறார்கள்.

என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கேரக்டரில் கண்ணா ரவி அந்த கேரக்டருக்கான வீரியத்தை நடிப்பில் கொண்டு வந்து விடுகிறார்.
மனைவி, குழந்தையிடம் அன்பு, அடுத்த வேட்டைக்காக வந்த இடத்தில் தன் கல்லூரி காலத்தோடு என் கணவன் தான் தன்னால் வேட்டையாடப்பட வேண்டியவன் என்பது தெரிந்த தடுமாறும் இடத்தில் தேர்ந்த நடிப்பு.
நட்பு சூழ
இந்த தாதாவின் பயோபிக்கில் நடிக்கும் நடிகராகவே கண்ணா ரவி கதைக் குள் வருகிறார். தொடர்ந்து நான்கு படங்கள் பிளாப் ஆன நிலையில் அடுத்து அவருக்கு ஒரு வெற்றி வேண்டும். அதற்காக இந்த தாதா பயோபிக்கில் நடிக்க ஒப்புக் கொள்கிறார். படப்பிடிப்பில் நடிப்பையும் தாண்டி சில சம்பவங்கள் அவரை பாதிக்கின்றன. தோழியின் கணவன் விஷயத்தில் அவர் எடுக்கும் முடிவு, அதனால் ஏற்படும் மன உளைச்சலை வெளிப்படுத்தும் இடங்கள் கண்ணா ரவி நடிப்பில் அத்தனை அழகு.
அவரது மனைவியாக வரும் லாவண்யா மன உளைச்சலுக்கு உள்ளான கணவனை தாங்கிப் பிடிக்கும் இடங்களில் நடிப்பில் பிரகாசிக்கிறார்.

அந்த ஊர் மக்களுக்கு அவர் காவல் தெய்வம். வெளி உலகுக்கோ அவர் தாதா. காவல்துறை லிஸ்டில் களை எடுக்கப்பட்ட வேண்டியவர். இப்படி ஒரு கேரக்டரில் சஞ்சீவ் அந்த கேரக்டரை தனது நடிப்பால் தாங்கிப் பிடிக்கிறார் மனைவியின் கல்லூரிக் கால தோழனே தன்னை என்கவுண்டர் செய்ய வந்த போலீஸ் அதிகாரி என்பதை தெரிந்து கொள்ளும் இடத்தில் கண்ணா ரவியை சைலண்டாக எச்சரித்து ஊரை விட்டு போகச் சொல்லும் இடத்தில் அவரது தாதாயிச நடிப்பு நிஜமாகவே பிரகாசம். அவரது மனைவியாக வினிஷாதேவி நல்ல மனைவியாக இரண்டு பிள்ளைகளின் தாயாக, நட்பின் இலக்கணமாக தனது நடிப்பு ஒவ்வொரு அசைவையும் நடிப்பால் நிரப்புகிறார்.
ஒரு சில காட்சிகளே என்ற போதிலும், ரேகா நாயர், ஐஸ்வர்யா ரகுபதி சிறப்பு.

ஸ்ரீனிவாசன் தேவராஜின் ஒளிப்பதிவும் விபின் பாஸ்கரின் பின்னணி இசையும் படத்தின் உயிரோட்டமாகவே அமைந்து விடுகிறது.
எழுதி இயக்கியிருக்கும் பவன், ஒரு தாதாவின் என்கவுண்டர் பின்னணியில் உள்ள ஆசாபாசங்களை காட்சிப்படுத்தியிருக்கிறார். அதுவும் கச்சிதமாக. தனது கல்லூரிக் கால நண்பன் தனது கணவரை கொல்ல வந்த ரகசிய போலீஸ் அதிகாரி என்பதை வினிஷா தேவி தெரிந்து கொண்ட பிறகு ஏற்படும் திருப்பம் நிஜமாகவே எதிர்பாராதது. கடமைக்கும் நட்புக்குமான இந்த பாலம் கதையின் பலமும் கூட.

இந்தத் தொடர் ஜீ 5 இணையதளத்தில் காணக் கிடைக்கிறது.