படிக்காத பக்கங்கள் பட விமர்சனம் 3/5

செல்வம் மாதப்பன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ள படம் ‘படிக்காத பக்கங்கள்’.
இதில் பிரஜின், ஜார்ஜ் மரியன், பாலாஜி, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
சேலத்தில் உள்ள ஏற்காடு பகுதிக்கு ஷூட்டிங் வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.. அப்போது ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறார். அந்த ஹோட்டலில் அவர் பேட்டி எடுக்க அங்குள்ள லோக்கல் சேனல் ரிப்போர்ட்டர் முத்து வருகிறார்.
அந்த பேட்டியின் போது.. நீங்கள் இந்த அளவுக்கு பெரிய நடிகையாக வளர்வதற்கு காரணம் யாருடன் படுத்தீர்கள்.? என கேள்வி கேட்கிறார்.. இதனால் யாஷிகா செருப்பால் அடித்து விடுகிறார்.
இதனை அடுத்து அவரது கேமரா ஸ்டாண்டில் யாஷிகாவை அடித்து கொலை செய்ய முயற்சிக்கிறார் முத்து.. நீ சொல்வதை நான் கேட்கிறேன்.. நீ யார் என்று யாஷிகா கேட்கிறார்
நான் உன்னுடன் படுக்க வேண்டும்.. நான் உனது தீவிர ரசிகர் என்று சொல்லி நிபந்தனை விதிக்கிறார்.
நீ ரிப்போர்ட்டர் இல்லை.. என்னுடைய ரசிகனும் இல்லை என்னுடைய ரசிகன் இப்படி செய்ய மாட்டேன் உண்மையில் நீ யார் என்று கேள்வி கேட்கிறார்.
நாங்கள் பெண்களை பெரிய பெரிய விஐபிகளுக்கு விருந்தாக்கும் ஒரு கும்பலின் தலைவன் என்கிறான். ஆனால் யாஷிகாவோ.. உன்னை இங்கு வரவைத்ததே நான் தான்.. அதற்கு நான் போட்ட ஸ்கெட்ச் என்கிறார்.
அப்படி என்றால் யாஷிகா உண்மையில் யார்? இதற்க்கு என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கி இந்த படிக்காத பக்கங்களை படிக்கத்தக்க வகையில் கவர்ச்சியாகவும் அழகாக கொடுத்திருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.. இந்த படத்திலும் நடிகை ஸ்ரீஜா என்ற பெயரில் நடிகையாக வருகிறார்..
கவர்ச்சியிலும் நடிப்பிலும் மிரட்டி இருக்கிறார் யாஷிகா ஆனந்த்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் பிரஜின் இடைவேளை நெருங்கும்போது தான் வருகிறார்.. வந்த பிறகு நாயகிக்கு உதவும் கேரக்டரில் தன்னால் முடிந்த உதவியை செய்து இருக்கிறார்..
இவர்களுடன் வில்லன் கும்பலைச் சேர்ந்த முத்து, எம்எல்ஏ உள்ளிட்ட பலரும் கதைக்கு ஏற்ப பயணித்து இருக்கின்றனர்.
சைக்கோ வில்லன் முத்துக்குமரன் மிரட்டி இருக்கிறார்.. அதுபோல ஆதங்க பாலாஜி மற்றும் தன்ஷிகா உள்ளிட்டோரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.
இசையமைப்பாளர் ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்துள்ளார்… பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணிக்கிறது..
திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் டாலி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் மூர்த்தி மற்றும் சரண் ஷண்முகம் எடிட்டிங் செய்துள்ளனர்.
படத்தை இரண்டு மணி நேரத்திற்குள் எடிட்டிங் செய்து செய்திருக்கின்றனர்.. இதை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அதுபோல படத்தின் ஒளிப்பதிவும் பாராட்டத்தக்க வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை எஸ் மூவி பார்க் & பவுர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
பொதுவாகவே நாம் சில செய்திகளை நாளிதழ்கள் படிக்கும்போது ஒரு விபத்து ஒரு கற்பழிப்பு ஒரு கொலை என்ற சம்பவங்களை படிப்போம்.. இவை அனைத்தும் பெரிய எழுத்துக்களில் தலைப்பு செய்தியாக வந்திருக்கும் ஆனால் அதை எடுத்து ஒரு சில தினங்களில் இது தொடர்பான கைது விசாரணை அல்லது முன்ஜாவின் வழக்கு வாபஸ் என்ற செய்திகள் சிறிய செய்தியாக போடப்பட்டிருக்கும்.
ஆனால் இவைதான் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.. இதை படிக்காத பக்கங்கள் என்ற பெயரில் வசனங்களாக வைத்திருக்கிறார் இயக்குனர் செல்வம் மாதப்பன். நாம் படித்த பக்கங்களை விட படிக்காத பக்கங்கள் நிறைய இருக்கிறது அதை படிக்க வேண்டும் என்ற சிந்தனையில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
ஆக இந்த படிக்காத பக்கங்கள்.. படிக்க வேண்டிய பக்கங்கள்..
