சினிமா செய்திகள்

‘அட்டு’ பட இயக்குநர் ரத்தன் லிங்காவின் தயாரிப்பில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் மற்றும் அல்முரியாத் இணைந்து தயாரிக்கும் புரொடக்ஷன் எண் 2 திரைப்படம் திருவள்ளூரில் பூஜையுடன் தொடங்கியது.
‘அட்டு’ திரைப்பட இயக்குநர் ரத்தன் லிங்கா மற்றும் ராஜகுமார் வேலுசாமி தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தினை இயக்குநர் மன்னவ ராஜன் இயக்குகிறார். லெனின் பாலாஜி ஒளிப்பதிவாளராகவும், நாகராஜன் படத்தொகுப்பாளராகவும், இணைந்திருக்கிறார்கள்.
அர்ஜுன் என்கிற புதுமுக நடிகர் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக ‘செம்பி’ படத்தில் நடித்த முல்லை நடிக்கிறார்.
ரஇந்த படம் நம் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்ட ஒரு மருத்துவ இனத்தை பற்றிப் பேசுகிறது.
ரசிகர்கள் பாராட்டுகளுடன் தேசிய விருதுகளையும் குறி வைத்து இப்படம் உருவாகிறது.
இயக்குநர், தயாரிப்பாளர் ரத்தன் லிங்கா மற்றும் Almuriat ராஜகுமார் வேலுசாமி ஆகியோரின் தயாரிப்பில் ஏற்கெனவே உருவான “லாக்” திரைப்படம் மிக விரைவில் திரையில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.