பிரபல தொழிலதிபர் வி.கே.டி.பாலனின் ஆரம்ப கால வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை மையக்கருவாக வைத்துக்கொண்டு, ஒரு கேங்ஸ்டர் படமாக, அதேநேரம் பிளாக் காமெடி ஜானர் திரைக்கதையாக தந்திருக்கிறார்கள்.
காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்த குருவி ராஜன் கொஞ்சமும் எதிர்பார்த்திராத நிலையில் சாதாரண மனிதர்கள் இரண்டு பேரால் கொல்லப்படுகிறான். யார் இந்த குருவி ராஜன்? அவனது சாம்ராஜ்யத்தை அழித்து அவனையும் அழித்த அந்த இரண்டு சாதாரணமானவர்கள் யார்? என்பதே இந்த விறுவிறு படம். மங்களூரில் உள்ள கல்லூரியில் பிரபல ரவுடியான குருவி ராஜன் பற்றி மாணவர்கள் ஆராய்ச்சி செய்வதில் இருந்து படம் தொடங்குகிறது. அங்கு அவர்களுக்கு போதுமான தகவல் கிடைக்காததால் பிரபல பேராசிரியர் ராஜ்குமாரை நாடுகிறார்கள். முதலில் மறுக்கும் அவர், பின்னர் அனைத்தையும் சொல்கிறார்.

கேங்க்ஸ்டர் குருவிராஜனை தனது ஆபரேஷனுக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும் ஷெரிப் எதிர்பாராதவிதமாக சந்திக்கிறார். அந்த சந்திப்பில் குருவி ராஜன் பெரிய தாதா என்பதை அறியாத ஷெரிப் கை நீட்டி விடுகிறார். அதன்பிறகே தான் அடித்தது சாதாரண மனிதனை அல்ல என்பது தெரிய வர…பயத்தில் நடுநடுங்கி்ப் போகிறார் ஷெரிப். அதன்பிறகு என்ன நடந்தது என்பது பரபரப்பான மீதிக்கதை.

அர்ஜை குருவி ராஜனாகவும் ஆஷிக் ஹுசைன் ஷெரிப்பாகவும் மிரட்டலான நடிப்பைக் கொடுள்ளனர். நகைச்சுவை நடிகர் ஷாரா சும்மாவே சிரிக்க வைப்பார். இந்தப்படத்தில் இன்னும் கூடுதலாகச் சிரிக்க வைக்கிறார். பேராசிரியர் வேடத்தில் வரும் ராஜ்குமார், சுரேஷ் சக்ரவர்த்தி, மணி வைத்தி, சாய் பிரசன்னா, ஜிப்ஸி நவீன் என எல்லாருமே தங்கள் கேரக்டர்களில் நட்சத்திரங்களாக ஜொலிக்கிறார்கள்.

பிரண்டன் சுஷாந்த்தினின் கேமரா, ஆக்ஷன் காட்சிகளில் அனாயாசமாக சுழன்று வித்தை காட்டுகிறது.
மூன்ராக்ஸ் பின்னணி இசையில் சவுண்டு அதிகம். ஒரு மணி நேரமே ஒடும் இந்த படத்தை SHORTFLIX தளத்தில் ரசிக்கலாம்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/1-5-696x392-1.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/1-5-696x392-1-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்பிரபல தொழிலதிபர் வி.கே.டி.பாலனின் ஆரம்ப கால வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை மையக்கருவாக வைத்துக்கொண்டு, ஒரு கேங்ஸ்டர் படமாக, அதேநேரம் பிளாக் காமெடி ஜானர் திரைக்கதையாக தந்திருக்கிறார்கள். காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்த குருவி ராஜன் கொஞ்சமும் எதிர்பார்த்திராத நிலையில் சாதாரண மனிதர்கள் இரண்டு பேரால் கொல்லப்படுகிறான். யார் இந்த குருவி ராஜன்? அவனது சாம்ராஜ்யத்தை அழித்து அவனையும் அழித்த அந்த இரண்டு சாதாரணமானவர்கள் யார்? என்பதே இந்த...