சினிமா செய்திகள்

கார்த்திக் நடிக்கும் ‘தீ இவன்’ படத்தில் சன்னி லியோன் நடனம் நவம்பர் 15-ல் படப்பிடிப்பு

நவரச நாயகன் கார்த்திக் நடிக்கும் ‘தீ இவன்’ படத்தில் தற்போது பிரபல இந்த நடிகை சன்னி லியோனும் தற்போது
இணைந்து கொண்டிருக்கிறார்.
மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக், சுகன்யா, ராதா ரவி, சுமன்.j, ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய் கணேஷ் நட்சத்திரங்களாக ஜொலிக்க, ‘ரோஜா மலரே, அடடா என்ன அழகு, சிந்துபாத்’ ஆகிய படங்களை இயக்கி தயாரித்த T.M.ஜெயமுருகன் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கியுள்ளார்.
ஒளிப்பதிவு Y.N.முரளி, படத்தொகுப்பு மொகமத் இத்ரிஸ், பின்னணி இசை A. J. அலி மிர்ஸா, தயாரிப்பு மேற்பார்வை – M. அப்பு, மக்கள் தொடர்பு- மணவை புவன்.
பிரமாண்ட பொருட்செலவில் நிர்மலாதேவி ஜெயமுருகன் தயாரித்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் T.M. ஜெயமுருகன் கூறுகையில், ‘‘நம் தமிழ் சமுதாயம் கலை மற்றும் கலாச்சாரம், சமூக உறவுகளை கொண்டு கட்டமைக்கப்பட்டது. ஆனால் இன்று அவைகள் கட்டுப்பாடுகளை இழந்து வருகிறது. இன்றைய இளம் தலைமுறைக்கு நம் உறவையும் கலாச்சாரத்தையும் கொண்டுசெல்லும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.
இந்த படத்தில் இடம் பெற உள்ள ‘மேலே ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம்’ என்ற பாடலுக்கு நடிகை சன்னி லியோனை நடனமாட வைக்க வேண்டும் என்ற திட்டம் இருந்தது. இதற்காக மும்பை சென்று நடிகை சன்னி லியோனை நேரில் சந்தித்து பேசினேன்.. கதை மற்றும் நடிகர்களை கேட்டவுடன் அந்த பாடலுக்கு நடனமாட ஒப்புக் கொண்டார்’’
என்றார். இந்த பாடலின் படப்பிடிப்பு நவம்பர் 15 ஆம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக செட் அமைத்து நடைபெற உள்ளது’’ என்கிறார்.