இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் இன்று திரைக்கு வரும் ’யானை’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு முன்னதாக சென்னையில் நடைபெற்றது. அருண் விஜய், இயக்குனர் ஹரி, நடிகர் தலைவாசல் விஜய், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் படத்தின் நாயகன் அருண் விஜய் பேசுகையில், “இந்தப் படத்தின் ப்ரமோஷனுக்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றினோம். ரசிகர்களை நேரடியாக சென்று சந்தித்தது நல்ல அனுபவமாக இருந்தது. நாங்கள் அனைவரும் உண்மையான நேர்மையான உழைப்பை இப்படத்தில் போட்டுள்ளோம். நிச்சயம் இப்படம் உங்களை திருப்திப்படுத்தும். ஜி.வி.பிரகாஷ் அற்புதமான பாடல்களை வழங்கியுள்ளார். இப்படம் உலகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது’’ என்றார்.
இயக்குனர் ஹரி கூறுகையில், ”ரசிகர்களை மரியாதை செய்யவே ஒவ்வொரு ஊருக்கும் சென்று அவர்களை சந்தித்தோம். ’விக்ரம்’ வெற்றியை பார்க்கும் போது சினிமா எப்போதும் ஸ்ட்ராங்கான ஒன்று தான் என்ற நம்பிக்கை வந்துள்ளது.
பிற மொழி படங்கள் ஹிட்டானதும் தமிழ் இயக்குநர்கள் எல்லாம் அதுபோல படம் எடுக்கமாட்டீங்களா? என்று சிலர் கிண்டல் பண்ணினார்கள். அதை உடைத்தெறியும் விதமாக விக்ரம் படம் இருந்தது. அதுபோல எங்கள் ‘யானை’யும் உங்களை ரசிக்க வைக்கும்” என்றார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/06/bg7.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/06/bg7-150x150.jpgrcinemaசெய்திகள்இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் இன்று திரைக்கு வரும் ’யானை’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு முன்னதாக சென்னையில் நடைபெற்றது. அருண் விஜய், இயக்குனர் ஹரி, நடிகர் தலைவாசல் விஜய், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் படத்தின் நாயகன் அருண் விஜய் பேசுகையில், “இந்தப் படத்தின் ப்ரமோஷனுக்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றினோம். ரசிகர்களை நேரடியாக சென்று சந்தித்தது நல்ல அனுபவமாக இருந்தது....