சினிமா செய்திகள்

தேசிய விருது பெற்ற ‘ஜல்லிக்கட்டு’ மலையாள படம் ரசிகர்கள் வரவேற்புடன் தமிழிலும் வெளியானது

மலையாளத்தின் பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ‘ஜல்லிக்கட்டு’ படம் கடந்த 2019 ம் ஆண்டு வெளியானது. கேரள அரசின் விருது பெற்ற இந்த படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. சிறந்த ஒளிப்பதிவிற்காக இப்படம் தேசிய விருதினையும் வென்றுள்ளது. மேலும் ஆஸ்கர் விருதிற்காகவும் பரிந்துரை செய்யப்பட்டது. படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சாபுமோன் அப்து சமது, சாந்தி பாலச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.
கிரிஷ் கங்காதரன் இந்த படத்தின் சிறந்த ஒளிப்பதிவுக்காக தேசிய விருதை பெற்றார். தீப்பு ஜோசப் இப்படத்திற்கு பின்னணி இசையை உருவாக்கியுள்ளார். மாபெரும் வெற்றி மற்றும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் தமிழ் உரிமையை AR என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பாளர் அமித் குமார் அகர்வால் கைப்பற்றி தமிழில் ‘டப்’ செய்து தற்போது அமேசான் பிரைமில் வெளியிட்டுள்ளார் .

கேரளாவில் ஒரு மலையோர கிராமத்தில் இறைச்சிக்காகக் கொண்டு வரப்படும் ஒரு எருமை, கட்டை அவிழ்த்துக் கொண்டு ஓடுகிறது. அந்த எருமையை ஊர் மக்களே சேர்ந்து பிடிப்பது தான் இந்தப் படத்தின் கதையாகும். மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான இப்படம் தற்போது தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *