கதையின் நாயகனாக அறிமுகமாகிறார் அர்ஜுன் தாஸ், நாயகியாக துஷாரா விஜயன்
தேசிய விருது பெற்ற G.வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகி வந்த ‘அநீதி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
‘கைதி’ ’மாஸ்டர்’ படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜூன்தாஸ் முதன்முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் மாரியம்மாவாக நடித்து பெரும் கவனம் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.
விருதுநகரில் தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களான M.கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல்,
வரதராஜன் மாணிக்கம் ஆகியோருடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை துவங்கி தயாரிப்பாளராக மாறியுள்ள வசந்தபாலனின் முதல் தயாரிப்பான இந்த திரைப்படத்தை அவரே இயக்கியுள்ளதோடு, கதை, திரைக்கதையையும் எழுதியுள்ளார்.
இயக்குநர் வசந்தபாலனால் ’வெயில்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட G.V.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். G.V.பிரகாஷ்குமார் & வசந்தபாலன் கூட்டணியில் இந்தப் படத்திலும் மனதைத் தொடும் நான்கு இதமான பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
பாடல்களை கார்த்திக் நேத்தா, ஏகாதசி எழுதியுள்ளனர்.
வசந்தபாலனின் முந்தைய படங்களில் பாடல்கள் எழுதிய மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் நட்பின் நினைவாக நா.முத்துக்குமாரின் கவிதைகளிலிருந்து சில வரிகளைத் தொகுத்து ஒரு திரைப்பாடலுக்கு பயன்படுத்தியுள்ளார். ஜிவி பிரகாஷ் பாடிய அப்பாடல் இனிமையான காதல் பாடலாக வந்துள்ளது.

வனிதா விஜயகுமார், ‘நாடோடிகள்’ பரணி, ‘பிக் பாஸ் புகழ்’ சுரேஷ் சக்கரவர்த்தி, ‘அறந்தாங்கி’ நிஷா, காளி வெங்கட், சாரா, அர்ஜூன் சிதம்பரம், இயக்குநர் எஸ்.கே. ஜீவா, இயக்குநர் அருண் வைத்தியநாதன், இயக்குநர் சுப்பிரமணிய சிவா மற்றும் நாட்டிய கலைஞர் பத்மஸ்ரீ சாந்தா தனஞ்செயன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் J.சதீஷ்குமார் மற்றும் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக் களங்களில் படங்களை எழுதி இயக்கிய வசந்தபாலன் இந்த படத்திலும் வித்தியாசமான கதையமைப்பை வடிவமைத்துள்ளார்.

அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘அநீதி’, ஜீன் மாதம் வெளியாகவுள்ளது. ‘அநீதி’ வெளியீட்டிற்குப் பின் தொரடர்ந்து திறமையுள்ள புது இயக்குநர்களை அறிமுகப்படுத்தி படங்களை தயாரிக்கவுள்ளது அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம்.
ஒளிப்பதிவு: எட்வின் சகாய்.
கலை இயக்கம்: சுரேஷ் கல்லேரி.

படத்தொகுப்பு: M.ரவிக்குமார்.

வசனம்: ’இயக்குநர்’ எஸ்.கே.ஜீவா.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/05/ff96519c-d94c-4ffd-ae5d-93e9dfbe1246-1024x819.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/05/ff96519c-d94c-4ffd-ae5d-93e9dfbe1246-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்கதையின் நாயகனாக அறிமுகமாகிறார் அர்ஜுன் தாஸ், நாயகியாக துஷாரா விஜயன் தேசிய விருது பெற்ற G.வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகி வந்த ‘அநீதி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘கைதி’ ’மாஸ்டர்’ படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜூன்தாஸ் முதன்முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் மாரியம்மாவாக நடித்து பெரும் கவனம் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் துஷாரா...