சலவை தொழிலாளி ராமசாமி மீது இரு சக்கர வாகனம் ஒன்று மோத, அவரது தோள்பட்டை எலும்பு முறிகிறது. அவருக்கு வக்காலத்து வாங்கும் ஊர் முக்கியப்புள்ளி இருசக்கர வாகனத்தை கைப்பற்றி பூட்டி வைக்கிறார். இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய இளைஞரின் தந்தை, ராமசாமிக்கு நஷ்ட ஈடாக ஒரு சிறு தொகையை தர முன்வருகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார், முக்கிய புள்ளி. இத்தனைக்கும் நடுவில் போலீசும் வந்து ராமசாமியை மிரட்டுகிறது. இந்த பிரச்சினையில் படிப்படியாக மோதல் முற்றி விவகாரம் கோர்ட்டுக்கு போகிறது. அங்காவது ராமசாமிக்கு நீதி கிடைத்ததா? என்பது கிளைமாக்ஸ்.
ஒரு சிறிய சம்பவத்தை கருவாக எடுத்துக் கொண்டு அதில் இருக்கும் சாதி அரசியலை அக்கு வேறு ஆணி வேறாக அலசியிருக்கிறார், இயக்குனர் மகிவர்மன் சி.எஸ்.

சலவைத் தொழிலாளியாக மு.ராமசாமி கச்சிதமான தேர்வு. விபத்துக்குப்பிறகு ஆளாளுக்கு தன்னை பந்தாடுவதை அமைதியாக எதிர்கொள்ளும் காட்சியில் தேர்ந்த நடிப்பு. நாசர் தொடங்கி ‘புகழ்’ மகேந்திரன், பௌலின் ஜெசிகா, ராணி ஜெயா, காக்கா முட்டை பாட்டி, ரெஜின் ரோஸ், திருநாவுக்கரசு, பிரசன்னா பாலசந்திரன், முத்து அழகர்சாமி, ஆதன் குமார், மாஸ்டர் அபியங்கர் என அத்தனை பேரும் தங்கள் கேரக்டர்களில் நிலைக்கிறார்கள்.
லோகேஸ்வரன் இசையும், சேதுமுருகவேல் அங்காரகன் கேமராவும் கதையோடு நம்மை ஐக்கியப்படுத்தி விடுகிறார்கள்.
சாதி காரணமாக ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞன் (புகழ் மகேந்திரன்) –ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணின் (பவுலின் ஜெஸ்ஸிகா) காதலை சாதி எப்படி உட்புகுந்து வேரறுக்கிறது என்பதை வலிக்கும்படி சொல்லி இருக்கிறார்கள்.

பணத்துக்கும், உறவுகளுக்கும் நீதி எப்படி வளைக்கப்படுகிறது… எளியவர்க்கும், ஏழைகளுக்கும் அது எப்படி இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்பதை சிவப்பு சிந்தனையுடன் சொல்லியிருப்பதற்காகவே இயக்குனரை பாராட்டலாம்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/05/202204301447462874_1_vaaidha._L_styvpf.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/05/202204301447462874_1_vaaidha._L_styvpf-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்சலவை தொழிலாளி ராமசாமி மீது இரு சக்கர வாகனம் ஒன்று மோத, அவரது தோள்பட்டை எலும்பு முறிகிறது. அவருக்கு வக்காலத்து வாங்கும் ஊர் முக்கியப்புள்ளி இருசக்கர வாகனத்தை கைப்பற்றி பூட்டி வைக்கிறார். இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய இளைஞரின் தந்தை, ராமசாமிக்கு நஷ்ட ஈடாக ஒரு சிறு தொகையை தர முன்வருகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார், முக்கிய புள்ளி. இத்தனைக்கும் நடுவில் போலீசும் வந்து ராமசாமியை மிரட்டுகிறது. இந்த பிரச்சினையில்...