சினி நிகழ்வுகள்

அழகுக்கு அழகு சேர்க்கும் அழகுக்கலைஞர் ‘டயானா’

“ஒரு நிமிஷம் இருங்க” என்று சொன்னாலே, அனைவரின் கவனமும் அங்கு திரும்பும். அப்படி தன் பக்கம் கவனத்தை திரும்ப வைத்து, சோசியல் மீடியா மூலம், மக்களுக்கு பல நல்ல தகவல்களை அளித்து, பிரபலமானவர் லண்டன் டயானா மகேந்திரன். இவர் திரை கலைஞர்கள் பலரை அழகுபடுத்திய, அழகுக்கலைஞர். பல இயக்குனர்கள் நடிக்க அழைப்பு விடுத்தும், தவிர்த்து வருபவர். அதேநேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆர்வம் அததிகம். விரைவில் தமிழ் ரசிகர்களை, தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் சந்திக்க உள்ளார்.

அதுபற்றி இதோ அவரே பேசுகிறார்.
“ஒரு நிமிஷம் இருங்க”
வணக்கம் நான் டயானா மகேந்திரன் அழகுக்கலை நிபுணர்.& மேக்கப் ஆர்டிஸ்ட். health and social care& nursing top-up BSc படித்து முடித்து இருக்கேன்.
2005-ல் என் 16 வயதில் அழகுக் கலையை ஆரம்பித்தேன். எனக்கு முதலடியை போட்டு கொடுத்தவர்கள் அபர்ணா பாலநாதன். பிறகு சென்னையில் 6 மாத காலமாக அழகுக்கலை நிபுணர் திருமதி வசந்த் ராவிடம் அவர்களிடம் பயிற்சி பெற்றேன்.
பிறகு சினிமா கலைஞர்களுக்கும் திருமண நிகழ்ச்சிகளுக்கும் எனது பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன்.
பிறகு லண்டன், கனடா, மலேசியா என பல நாடுகளுக்கு எனது மேக்கப் பணியை தொடர்ந்து பிசியாக பறந்து கொண்டிருந்தேன்
எனது உழைப்பிற்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்க தாமதம் ஏற்பட்ட நிலையில், அதன் பிறகுதான் ‘டிக் டாக்’ செய்து “ஒரு நிமிஷம் இருங்க” என்று எனது திறமையை வெளிப்படுத்தினேன். மேக்கப் கலையில் பிரபலம் ஆனேன். இப்போது எல்லோருக்கும் அழகு குறிப்புகள், அலங்காரம் அதோடு சொந்த தயாரிப்பில் முகப்பொலிவுக்கு தேவையான கிரீம் என வாழ்க்கை அழகுமயமாக போய்க்கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் என்னை ஊக்குவித்த கோடான கோடி மக்களுக்கு நன்றி சொல்லி என்னை மென்மேலும் வளர வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

-இப்படி சொல்லி முடிக்கிறார், இந்த அழகுதேவதை

அழகை அழகாக சொன்ன இந்த அற்புத கலைஞருக்கு நாம் தரும் தொடர் ஆதரவு தான் அவர்களின் எதிர்காலப் பிரகாசம். ஆவன செய்வோமா? நம்மால் ஆனதை செய்வோமா…ஆதரவுக் கரம் நீட்டுவோமா…