சினி நிகழ்வுகள்

ஐடி இளைஞர்கள் இணைந்த சைக்கோ திரில்லர் படம் ‘யாரோ’ பிப்ரவரி 4-ந்தேதி திரைக்கு வருகிறது

TAKEOK PRODUCTIONS சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் சந்தீப் சாய் இயக்கத்தில் உருவாகியுள்ள சைக்கோ-த்ரில்லர் திரைப்படம் ‘யாரோ.’ இது ஒரு வித்தியாசமான சைக்கோ த்ரில்லர் ஆகும்,

ஒரு கொலை மர்மத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த கதை புதுமுகங்கள் நடிப்பில், பரபரப்பான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ளது. படத்தை TRIDENT ARTS சார்பில் ஆர்.ரவீந்திரன் வழங்குகிறார்.

படத்்தின் தயாரிப்பாளரான வெங்கட் ரெட்டியே நாயகனாகவும் நடிக்கிறார்.

அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வரும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசுகையில், ‘‘ஐடி துறையில் அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வெங்கட், சினிமா ஆசையில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். படம் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இயக்குநர் சந்தீப் சாய் அழகாக இயக்கியிருக்கிறார். படத்தை பிப்ரவரி 4-ந்தேதி வெளியிடுகிறோம் உங்களுக்கு பிடிக்கும்’’ என்றார்.

இயக்குநர் சந்தீப் சாய் பேசுகையில், ‘‘நானும் வெங்கட்டும் ஐடியில் ஒன்றாக வேலை செய்தோம், இருவருக்கும் சினிமா ஆசை இருந்தது, வேலையை விட்ட பிறகு ஒரு குறும்படம் செய்தேன், அதை பார்த்துவிட்டு வெங்கட் படம் செய்யலாம் என்றார், அப்படித்தான் இப்படம் துவங்கியது. அவர் மிக அர்ப்பணிப்புணர்வுடன் படத்தை செய்திருக்கிறார். என்னுடைய குழுவினரால் தான் இப்படம் அழகாக வந்திருக்கிறது. இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளின் இசை தான் படத்தின் முழு பலமும். அவரில்லாமல் படம் இத்தனை சிறப்பாக வந்திருக்காது.

ஒளிப்பதிவாளர் K.B. பிரபு என்ன சொன்னாலும் அதனை கூலாக கையாண்டு, அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார். எங்கள் குழுவினருக்கு மீண்டும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். படத்தின் இறுதி வரையிலும், பரபரப்பாக புதுமையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து தான் கதையை எழுதினோம். அனில் கிருஷ்சின் தனித்துவமான எடிட்டிங் பாணி இந்த படத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தியுள்ளது. இப்படம் உருவாக முழுக்காரணம் என் நண்பர் வெங்கட் தான். அவர் இந்த படத்தின் மீது நம்பிக்கை வைத்து உழைத்திருக்கிறார். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்’’ என்றார்.

ஒளிப்பதிவாளர் KB பிரபு பேசுகையில், ‘‘குறும்படம் செய்து தான் திரைத்துறைக்கு வந்தேன். என் ஒளிப்பதிவில் இன்னொரு படமும் தயாராகி வருகிறது. இயக்குநர் சந்தீப்பை எடிட்டர் மூலமாக தான் சந்தித்தேன். மிக திறமையானவர். ஒரு நல்ல படத்தை உருவாக்கியுள்ளோம் என்பதில் மகிழ்ச்சி’’ என்றார்.

எடிட்டர் அனில் கிரிஷ் பேசுகையில், ‘‘நாங்கள் இளைஞர்களாக இணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். எப்போது இந்தப் படம் வெளியாகும் என ஆவலாக இருந்தேன். இப்போது சரியான நேரத்தில் வெளியாகிறது. சந்தீப் என் நண்பர், இந்தப் படத்தின் கதை உருவான சமயத்தில் இருந்தே தெரியும். ‘நான் லீனியர் பேட்டர்னை’ எடிட்டிங்கில் முயற்சித்துள்ளேன். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளோம். இந்தப் படத்தை அழகாக உருவாக்கியுள்ளோம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்’’ என்றார்.

இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளின் பேசியதாவது. ‘‘நான் இதற்கு முன் “நெடுநல் வாடை” படத்திற்கு இசையமைத்தேன், அப்படத்திற்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது. இது என் இரண்டாவது படம். இயக்குநர் சந்தீப் சாய் 10 ஆண்டுகளாக என் நண்பர். இந்த படத்தின் பாடல்களை விட பின்னணி இசைக்கு அதிகம் உழைத்திருக்கிறோம். ஒரு புதுமையான சைக்கோ-திரில்லர் பின்னணியை கொண்ட இந்த படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம்’’ என்றார்.

படத்தின் தயாரிப்பாளரும் நாயகனுமான வெங்கட் பேசியதாவது.

தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு முதலில் நன்றி. மிக இயல்பாக என்னிடம் பழகி, எனக்கு சினிமா பற்றி சொல்லி தந்து, இப்படத்தை வெளியிடுவதற்கு நன்றி. இப்படம் திரைக்கு வர அவர் தான் காரணம். இந்தப் படத்தை எடுக்க திட்டமிட போதே நிறைய சிக்கல்கள் வந்தது. அதையெல்லாம் தாண்டி தான் இப்படத்தை எடுத்தோம். படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் வேண்டுமென பல காலமாக தேடினோம், நிறைய பேர் எங்கள் பட்ஜெட்டில் வர முடியாது என்று சொல்லி விட்டார்கள், இறுதியாகத்தான் கே.பி.பிரபு வந்தார். அவர் பணத்தை மதிக்காதவர், சினிமாவை நேசிப்பவர். அதனால் இது சாத்தியமாயிற்று. இந்தப் படத்திற்கு ஒரு தூணாக இருந்தவர் எடிட்டர் அனில். எங்களுக்கு படத்தில் என்ன சிக்கல் வந்தாலும் அவரிடம் தான் சொல்வோம். அவர் அதை சரி செய்து தருவார். இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க…