சினிமா செய்திகள்

‘களவாணி’ வில்லன் இப்போது ‘ஓணான்’ பட ஹீரோ

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா, திருமுருகன், கஞ்சா கருப்பு நடிப்பில் வெளியான வெற்றித் திரைப்படம் களவாணி.
யதார்த்தமான கதைக்களத்தோடு நடிகர்களின் இயல்பான நடிப்பும் இணைந்து கொள்ள, படம் வசூலையும் வாரிக்குவித்தது. இப்படத்தின் மூலம் அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட நடிகர்களாக நாயகன் விமலும் வில்லன் திருமுருகனும் பிரபலமானார்கள்.
இயக்குநராகவும், நடிகராகவும் பல பரிமாணங்களில் வெளிப்பட்ட திருமுருகன் களவாணி திரைப்படத்தைத் தொடர்ந்து ஈட்டி, பென்சில் உள்ளிட்ட திரைப்படங்களிலும தனது இருப்பை நிரூபித்தார். தற்போது இதில் இன்னும் ஒரு படி மேலே போய் ஹீரோவக நடிக்கும் படமே ‘ஒணான்.’
எலிபெண்ட் ப்ளை எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சென்னன் இயக்கியுள்ள இந்த படத்தில் மாறுபட்ட தோற்றத்திலும், உடல் மொழியிலும், நடிப்பிலும் திருமுருகன் ஹீரோவாக தன்னை சிறப்பாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். இது இதுவரை பார்வையாளர்களால் அதிகம் பார்க்கப்படாத கேரக்டர் என்பதால் ரசிகர்களை ஈர்ப்பது அதிக நிச்சயம்.
நாயகன் திருமுருகனுடன் விழிகளால் காதல் மொழி பேசும் நாயகி ஷில்பா மஞ்சுநாத், காமெடியில் இருந்து சற்றே மாறி, முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் காளி வெங்கட், சிரிப்புக்கு வஞ்சமில்லாமல் கதையை எடுத்துச் செல்லும் சிங்கம் புலி என நடிப்பில் அவரவர் அசத்த, முக்கிய கதாபாத்திரங்களில் சரவண சக்தி, பாசக்கார தந்தை கேரக்டரில் ‘பூ’ ராமு பங்களிப்பும ்படத்தின் கூடுதல் பலமாகி இருக்கிறது.
படத்திற்கு இன்னும் பக்க பலமாக ஆண்டனி ஆப்ரகாமின் இசை ஈர்க்கிறது. ரசிக்க வைக்கும் பாடல்களாக ‘கள்ளிக்காட்டுப் பருந்தே’, ‘மனசுக்குள் இவன் வந்த மாயம் என்ன’ பாடல்கள் ரசிகர்களின் கொண்டாட்டமாகி இருக்கின்றன.

படத்தை எலிஃபெண்ட் ஃப்ளை எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ரஞ்சித்குமார்.P.R தயாரித்துள்ளார்.
நாயகனை மன நோயாளி, கொலைகார சைக்கோ என நம்ப வைக்கும் இந்த படத்தின் திரைக்கதை, முடிவில் தரும் சர்ப்ரைஸ் பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் அனுபவத்தைத் தரும் என்கிறார்கள், படக்குழுவினர்.

ரசிகர்களுக்கு அதுதானே வேண்டும்.