மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குனர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன். சினிமா விமர்சகராக இருந்து, இயக்குனராக மாறியுள்ள மாறன் இயக்கிய இந்த படம் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு தற்போது வெளிவரவிருக்கிறது.

இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட புளூ சட்டைமாறன் பேசுகையில், ‘‘படம் தயாரானதும் சென்னையில் தணிக்கை குழுவினருக்கு படத்தை திரையிட்டு காட்டினோம். எந்தவித காரணமும் சொல்லாமல் படத்திற்கு சான்றிதழே தர மறுத்து விட்டனர். இதையடுத்து ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்ப முடிவு செய்தோம். அதில் முக்கிய உறுப்பினராக உள்ள நடிகை கவுதமி சென்னையில் இந்தப்படத்தை பார்ப்பார் என சொல்லப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக பெங்களூரில் நாகபரணா என்பவர் தலைமையில் படத்தை பார்த்தனர். படம் பார்த்துவிட்டு படத்தில் 38 இடங்களில் கட் பண்ணவேண்டும் என்றும் அதற்கு ஒப்புக்கொண்டால் சான்றிதழ் தருகிறோம் என்றும் அவர்கள் சொல்ல…

அவர்கள் குறிப்பிட்ட 38 இடங்களில் உள்ள வசனங்கள், காட்சிகளை வெட்டினால் கிட்டத்தட்ட 200 கட்டுகள் விழும். அதன்பிறகு படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்தால் நிச்சயம் பிளாப் தான். தயாரிப்பாளரும் நானும் அதை விரும்பவில்லை. அதனால் அடுத்த முயற்சியாக ட்ரிபியூனலில் முறையிடுவது என முடிவெடுத்தோம். அங்கே படத்தை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமயம் பார்த்து அத்தனை வருடங்களாக இயங்கி வந்த அந்த அமைப்பையே கலைத்து விட்டார்கள்.

இறுதியாக ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தை நாடினோம். எங்களது தரப்பு நியாயங்களை கேட்ட நீதிமன்றம், அதற்கு முன்னதாக தணிக்கை குழு மற்றும் ரிவைசிங் கமிட்டி என இரண்டு தரப்பிலும் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்ய உத்தரவிட்டது.. மேலும் புதிதாக ஒரு கமிட்டி ஒன்றை அமைக்க கூறிய நீதிமன்றம், முறையான கட்டுக்களுடன் கூடிய சான்றிதழை வழங்க உத்தரவிட்டது. அதை தொடர்ந்து படத்தை பார்த்த புதிய கமிட்டியினர் வெறும் மூன்றே மூன்று இடங்களில் மட்டும் சிறிய கரெக்ஷன்களை சரி செய்யக் கூறி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கினார்கள்.

சென்சாரின் கெடுபிடிகள் காரணமாக தரமான படங்களை எடுப்பவர்கள் பயந்து பயந்து படம் எடுக்கவேண்டியுள்ளது. அதற்காக சென்சாரே வேண்டாம் என்று சொல்லவில்லை. நாடே கெட்டாலும் பரவாயில்லை, நான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என நினைக்கிற சில சுயநல மனிதர்களை குறிக்கும் வகையில் தான் இந்த ஆன்டி இந்தியன் என்கிற தலைப்பை வைத்துள்ளோம்.. ஒருவேளை இந்த தலைப்பு மறுக்கப்பட்டால், ‘கேணப்பையன் ஊருல கிறுக்குப்பையன் நாட்டாமை’ என டைட்டில் வைக்கலாம் என்றும் முடிவு செய்து வைத்திருந்தோம்.
படத்தை ஓடிடியில் நல்ல விலைக்கு கேட்டு வந்தாலும் கூட, முதலில் தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். படத்திற்கு நானே இசையமைத்துள்ளேன். இது ஒன்றும் பெரிய மியூசிக்கல் படம் இல்லை. அதனால் நானே இசையமைப்பாளராகவும் மாறிவிட்டேன்’’ என்றார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/09/2f137943-1615-4e86-834f-58b3251de796-1024x682.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/09/2f137943-1615-4e86-834f-58b3251de796-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குனர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன். சினிமா விமர்சகராக இருந்து, இயக்குனராக மாறியுள்ள மாறன் இயக்கிய இந்த படம் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு தற்போது வெளிவரவிருக்கிறது. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட புளூ சட்டைமாறன் பேசுகையில், ‘‘படம் தயாரானதும் சென்னையில் தணிக்கை குழுவினருக்கு படத்தை திரையிட்டு காட்டினோம். எந்தவித காரணமும் சொல்லாமல்...