பரத்தும் அவரது நண்பர் கோகுல் ஆனந்த்தும் கூட்டாக இணைந்து கொடைக்கானலில் தேயிலை தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார்கள். பரத்துக்கு மனைவியும், பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.

பரத்தின் மனைவி அபர்ணா வினோத்தும், நண்பன் கோகுல் ஆனந்தும் கள்ளக் காதலர்கள். இந்த விவகாரம் பரத் வீட்டில் வேலை பார்க்கும், உறவுக்கார இளைஞர் அருவி பாலாவுக்கு தெரிய வர… கோகுல் ஆனந்த்தின் மிரட்டலையும மீறி இந்த விவகாரததை அவர் பரத் காதுக்கு கொண்டு போனாரா? என்பது படத்தின் மீதிக் கதை.
தேயிலை தொழிற்சாலை முதலாளியாக வரும் பரத், நண்பன்-மனைவி துரோகம் தெரிந்ததும் நடிப்பில் விசுவரூபம் எடுக்கிறார். பரத்தின் மனைவியாக அபர்ணா வினோத் துரோக நடிப்பில் அந்த கேரக்டராகவே மாறித் தெரிகிறார். பரத்தின் நண்பராக வரும் கோகுல் ஆனந்த்தை இனி வில்லத்தன வேடங்களில் அடிக்கடி பார்க்கலாம்.

ஷாரங் இயக்கி இருக்கிறார். ஆரம்பத்தில் மெதுவாக நகரும் திரைக்கதை, அபர்ணா-கோகுல் கள்ளக் காதல் விவகாரம் தெரிய வந்த பிறகு வேகம் எடுக்கிறது. பலரும் தங்கள் உண்மை முகங்களை மறைத்து வேறொரு முகத்தைக் காட்டித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒரு பரபரப்பான திரில்லராக சொல்ல முயற்சித்ததில் பாதிக்கிணறு தாண்டியிருக்கிறார். இயக்குனர். யுவாவின் ஒளிப்பதிவில் கொடைக்கானல் இன்னும் அழகு.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/09/nadu.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/09/nadu-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்திரைப்படங்கள்பரத்தும் அவரது நண்பர் கோகுல் ஆனந்த்தும் கூட்டாக இணைந்து கொடைக்கானலில் தேயிலை தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார்கள். பரத்துக்கு மனைவியும், பெண் குழந்தையும் இருக்கிறார்கள். பரத்தின் மனைவி அபர்ணா வினோத்தும், நண்பன் கோகுல் ஆனந்தும் கள்ளக் காதலர்கள். இந்த விவகாரம் பரத் வீட்டில் வேலை பார்க்கும், உறவுக்கார இளைஞர் அருவி பாலாவுக்கு தெரிய வர... கோகுல் ஆனந்த்தின் மிரட்டலையும மீறி இந்த விவகாரததை அவர் பரத் காதுக்கு கொண்டு போனாரா?...