“துல்கர் சல்மானுக்கு பெருந்தன்மை அதிகம்”
வயகாம் ஸ்டுடியோஸ் 18 வழங்கும் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். துல்கர் சல்மான், கெளதம் வாசுதேவ்மேனென் நடித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் தேசிங் பெரியசாமி. இன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு மிக கலகலப்பாக நடைபெற்றது. விழாவில் பேசிய கெளதம் மேனன்,
” ஒரு ஆக்டராக இப்போது உங்கள் முன் நிற்கிறேன். இயக்குநர் தேசிங் அவரின் அப்ரோச் பிடித்திருந்தது” என்றார்.
இயக்குநர் தேசிங் பெரியசாமி பேசும்போது,
“இயக்குநர் கெளதம் சார் எனக்காக இந்தப்படத்தைப் பண்ணிக்கொடுத்தார். இந்தப்படத்திற்கு கெளதம் சார் செய்தது பெரிய உதவி. ஒன்றரை மணிநேரம் கதை கேட்டபின் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. அவருக்கு பெருந்தன்மை அதிகம். அவருக்கான பில்டப் ஷாட் வைக்கும் போது அவர் தன்னோடு ரக்சனையும் இணைத்துக் கொண்டார். இப்படி வேறு ஹீரோக்கள் செய்வார்களா? என்று தெரியவில்லை” என்றார்
Leave a Reply