சினி நிகழ்வுகள்

‘‘இந்த படம் உலகத் தரமிக்க படமாக இருக்கும்’’ ‘கொலை’ படத்தின் இசை விழாவில் விஜய் ஆண்டனி மகிழ்ச்சி

இன்பினிட்டி பிலிம் வெஞ்சர் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, பாலாஜி கே.குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்த ‘கொலை’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் மிஷ்கின், மிலிந்த் ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
விழாவில் படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி பேசுகையில், ”இந்த படத்தில் இணைந்திருப்பதே பெருமையான விஷயம். இந்த படம் இயக்குனர் பாலாஜியின் கனவு. இந்த படம் உலகதரமிக்க சிறந்த படமாக இருக்கும். இந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. இவர்களுடன் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சிவக்குமார், இந்த படத்தின் மீதும், இயக்குநர் மீதும் மிகுந்த நம்பிக்கையும் பற்றும் கொண்டு இருக்கிறார். ஒரு இசையமைப்பாளராக, இந்த படத்தின் இசையமைப்பாளரின் பணி எனக்கு உலகத் தரமாக தெரிகிறது. படதொகுப்பாளர் இந்த படத்தின் கதையை புரிந்து, அதை தொகுத்துள்ளார். இந்த படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் கலைஞர் ரமேஷ் ஆச்சார்யாவின் பணி பேசப்படும். படம் கண்டிப்பாக பெரிய வெற்றியை பெறும் நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “இந்த படம் உருவாக முழு காரணம் விஜய் ஆண்டனி தான். இயக்குனர் பாலாஜி படத்தை நேர்த்தியாக செதுக்கியுள்ளார். இந்த படம் இயக்குநர் மிஷ்கினுக்கு ஒரு டிரிபுயூட்டாக இருக்கும்” என்றார்.
இயக்குநர் பாலாஜி குமார் பேசுகையில், “இந்த தருணத்திற்காக நாங்கள் பல வருடம் காத்திருந்தோம். இந்த படம் உருவாக மிக முக்கியமான காரணம் விஜய் ரத்தினமும், விஜய் ஆண்டனியும் தான். இந்த கதையை விஜய் ஆண்டனியிடம் நான் கூறியபோது, அவர் கதைக்குள்ளேயே போய்விட்டார். அவருக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தான் இந்த படம் இவ்வளவு தூரம் உருவாக காரணம். இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் நம்பிக்கையுடன் உழைத்தார்கள். நடிகர்களின் ஒத்துழைப்பு இல்லாமல், இந்த படம் சிறப்பாக வந்திருக்காது” என்றார்.

ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயன் பேசுகையில், “இந்த படத்தில் நான் பணிபுரிந்தது எனக்கு பெரிய அனுபவமாக இருந்தது. இந்த படத்தை கொரோனா காலத்தில் நம்பிக்கை வைத்து துவங்கினார்கள். இந்த படத்தின் கதை புது மாதிரியாக இருக்கும். முதல்முறை பார்க்கும் போது ஒருவிதமாகவும், இரண்டாவது முறை பார்க்கும் போது வேறு அனுபவமாக இருக்கும்” என்றார்.
இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், “இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அவர் படத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவருக்கு திரைப்படங்கள் தான் எல்லாமே. இந்த படத்தின் இசையில் ஒரு புதுவித ஒலியை இசையை கொடுக்க முயற்சித்து இருக்கிறோம். இந்த படத்தின் ரீ ரெக்கார்டிங்க் 6 மாத காலம் எடுத்துக்கொண்டது. அது படம் வெளிவரும்போது ரசிர்களுக்கு புது அனுபவமாக இருக்கும் .” என்றார்.

நாயகி மீனாட்சி சௌத்ரி பேசுகையில், “இந்த படம் ஒரு பெரிய பயணம், இது எனது முதல் தமிழ்ப் படம். இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்த படத்தில் எனக்கு ஒரு கதாபாத்திரம் கிடைத்ததே எனக்கு பெரிய மகிழ்ச்சியான விஷயம். இந்த படத்தின் வெளியீட்டிற்காக நான் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறேன்.” என்றார்.

படத்தின் இன்னொரு நாயகி ரித்திகா சிங் பேசுகையில், “இந்த படத்தின் கதையை கேட்டபோதே, நான் கதைக்குள் ஆழமாக போய் விட்டேன். கதையின் முடிவை தெரிந்து கொள்ள நானும் விரும்பினேன். இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும்” என்றார்.

இயக்குநர் மிலிந்த் ராவ் பேசுகையில், “இந்த படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. படம் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தின் நடிகர்கள் எல்லாம் திறமையானவர்கள். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குனர் மிஷ்கின் பேசுகையில், “இயக்குனர் பாலாஜி, சினிமாவின் நுணுக்கங்கள் தெரிந்த ஒரு தொழில் நுட்ப கலைஞர். அவர் சினிமாவை படிப்பாக கற்றுக்கொண்டவர். இந்த படத்தின் டிரைலர் பார்ப்பதற்கு ஈர்க்கும் வகையில் இருக்கிறது. படத்தின் இசை ரசிக்கும் படி இருக்கிறது ” என்றார்.

தயாரிப்பாளர் கமல் போரா பேசுகையில், “இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் ஒரு வருட காலம் நடந்தது. நானும் இயக்குநரும் பெரிய விவாதத்திற்கு பிறகு, நல்ல படத்தை உருவாக்கியுள்ளோம். படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்’’ என்றார்.