ராஜமவுலி டைரக்‌ஷனில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டப் படம் ’ஆர்.ஆர்.ஆர்’. அல்லலூரி சீதா ராமாராஜு, கொமாராம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவான இந்த படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா சரண், சமுத்திரகனி ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் இருக்கிறார்கள்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என பல இந்திய மொழிகளில் ஜனவரி 7-ம் தேதி வெளியாக உள்ளது. எனவே அனைத்து மொழிகளிலும் தீவிரமாக படக்குழுவினர் புரமோஷன் செய்து வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்பு பாடல் வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பிற்காக ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் சென்னை வந்தனர். இந்நிலையில் தற்போது படத்தின் முன் வெளியீட்டு விழாவை பல மொழிகளில் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சென்னை கிண்டியில் உள்ள வர்த்தக மையத்தில் படத்தின் முன் வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ராஜமௌலி உள்ளிட்ட படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது.
நான் ராஜமெளலி சாரோட மிகப் பெரிய பேன். ‘மகதீரா’ படம் பார்த்ததில் இருந்தே அவரது ரசிகனாகி விட்டேன். அடுத்து அவர் இயக்கத்தில் ‘நான் ஈ’ படம் வந்த போது தான் நான் சினிமா உலகிற்குள் வந்தேன். அந்த படம் பார்த்த போது ஒரு ஈயை வைத்து இவ்வளவு பெரிய சூப்பர் ஹிட் படம் கொடுக்க முடியுமா என பயங்கர ஆச்சரியமாக இருந்தது. இன்னொரு பக்கம், ஒரு ஈயை வைத்தே படம் எடுக்கிறார்கள் என்றால், நம்மை வைத்து கண்டிப்பாக இங்கு படம் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.
இன்னொரு பக்கம் அதுவே பயமாகவும் அமைந்தது. ஈயை வைத்து எடுத்தாலே நன்றாக இருக்கு, எதற்காக இவர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என நினைத்து விடுவார்களோ என்ற பயம். அதுக்கு பிறகு அவரின் ஒவ்வொரு படங்களையும் ரசிக்க ஆரம்பித்தேன். எல்லோருக்கும் அவரின் பணி பிடிக்கும். இவ்வளவு பெரிய படங்களை, சாதனைகளை செய்து விட்டு அமைதியாக இருப்பது மிகவும் கஷ்டம். அதை தவம் போல செய்கிறார் என நினைக்கிறேன்.
இங்கு நமக்கெல்லாம் ஒரு படம் ஓடிட்டாலே, ‘ஹிட் கொடுத்துட்டோம்ல’ என நினைக்கத் தோணும். ஆனால் உலகம் முழுவதும் ஒரு படத்தை பார்க்க வைத்து விட்டு, ‘அடுத்து என்ன பெரிசா பண்ணலாம்’ன்னு யோசிக்கிறது ரொம்ப பெரிய விஷயம். சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் நம்ம கனவை தாண்டியும் சாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் அனைவருக்கும் நீங்கள் மிகப் பெரிய இன்ஸ்ப்ரேஷன்.

இந்த படத்தின் ஹீரோக்களை இரண்டு சிங்கங்கள் என்றும் சொல்லலாம், இரண்டு புலிகள் என்றும் சொல்லலாம். இவர்களை தூரத்தில் இருந்து பெரிய திரையில் தான் பார்த்து ரசித்துள்ளேன். ஆனால் கடந்த முறை விருது விழாவிற்கு வந்த போது, என்னுடைய படத்தை அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பார்ப்பார்கள்’ என கூறியது, இன்னும் நிறைய முயற்சித்து உழைக்க வேண்டும் என தோன்றியது. அவ்வளவு பெரிய குடும்பத்தில் இருந்து வந்து இவ்வளவு எளிமையாக உள்ளீர்கள்.
இது ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒன்றிணைக்கும் படமாக இருக்கப் போகிறது. இது இந்திய சினிமாவின் பெருமை. இந்த படம் முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியக்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். டிரைலரே மிரட்டலாக ஒரு படத்தை பார்ப்பது போல் ஷாட் ஷாட்டாக பார்க்க வைக்கிறது. இன்னும் படம் எப்படி இருக்குமோ என பார்க்க மிக ஆர்வமாக உள்ளேன்.
நான் கண்டிப்பாக முதல் நாள் முதல் ஷோ பார்க்க போறேன். நீங்களும் அனைவரும் கண்டிப்பாக தியேட்டரில் போய் பாருங்கள். கொரோனாவால் சினிமா உலகமும் தியேட்டர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 2022 ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே இந்த படம் வந்து மிகப் பெரிய வசூலை கொடுக்கப் போகிறது. அதைத் தொடர்ந்து அஜித்தின் வலிமை வரப் போகிறது. இந்த படங்களை பார்க்க மக்கள் தியேட்டருக்கு வந்தால் அதற்கு பிறகு வரும் எங்களின் படங்களும் ஓடும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியது,
“இரண்டு வருடங்களுக்கு பிறகு சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். அதற்கு காரணம் ராஜமௌலி மட்டும் தான். அவரது பெரிய ரசிகன் நான். இந்தப் படம் பாகுபலியின் சாதனையை முறியடிக்கும் என ராஜமௌலியிடம் சொன்னேன். என்னை நடனம் ஆட அழைத்தார்கள். எனக்கு நடனம் வராது. சிலருக்கு நடனம் ஆடினால் தான் கழுத்து சுளுக்கும். இவர்கள் ஆடுவதை பார்த்ததுமே எனக்கு கழுத்து சுளுக்கிக் கொண்டது.
இந்தப் படத்திற்கும் எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. 10 வருடங்களுக்கு முன்பு ‘மஹதீரா’ படத்தை டப் செய்து தமிழில் வெளியிட்டோம். அப்போது சத்யம் திரையரங்கில் அப்படத்தை வெளியிட வேண்டும் என ராஜமௌலி கேட்டுக் கொண்டார். இப்போது RRR படத்தை மூன்று ஏரியாக்களில் ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது. எப்படியும் சத்யம் திரையரங்கின் 6 திரைகளில் 5 திரைகளில் இந்தப் படத்தைத் தான் போடுவோம். இந்தப் படம் தென்னிந்தியாவின் ஒரு மைல் கல்லாக இருக்கும்” என்றார்.
நிகழ்ச்சியில் ராஜமௌலி பேசியதாவது.
“தமிழ்த்தாய்க்கு வணக்கம். சென்னை மாநகருக்கு வணக்கம். 13 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு முன்தொகை கொடுத்ததால் பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தை அவருக்கு கொடுத்துள்ளேன். இப்படத்தின் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு நன்றி. எனக்கு 50 வயது ஆகிறது. இப்போதும் என் அப்பா அவர் மேல் என்னை வைத்து உலகத்தை சுற்றிக் காட்டுகிறார். இந்திய மண்ணில் இருக்கும் ஒரு புரட்சி, இந்திய மண்ணில் இருக்கும் ஒரு கலாச்சாரம் அதுதான் இப்படம். இந்த மாதிரி படம் பண்ண இருவர் வேண்டும். நல்ல நண்பர்களாக சகோதரர்களாக அப்படிப்பட்ட இருவர் தான் ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும்’’ என்றார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/12/rrr-1024x710.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/12/rrr-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்ராஜமவுலி டைரக்‌ஷனில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டப் படம் ’ஆர்.ஆர்.ஆர்’. அல்லலூரி சீதா ராமாராஜு, கொமாராம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவான இந்த படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா சரண், சமுத்திரகனி ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் இருக்கிறார்கள். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம்...