நடிகர் சேதுராமன் மரணம் அடைந்தார்

தமிழில் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘”வாலிப ராஜா’ , ‘சக்க போடு போடு ராஜா’, ‘*50/50’ ஆகிய படங்களில் நடித்தவர், பிரபல தோல் மருத்துவ நிபுணர் சேதுராமன். எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றுள்ளார்.  வயது 37. நேற்று இரவு சென்னையிலுள்ள தனது வீட்டில் இருந்த சேதுராமனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு […]

Continue Reading

நடிகர் கமல்ஹாசன் குடும்பம் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

10 நாட்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து நாடு திரும்பிய ஸ்ருதி ஹாசன் கொரோனா வைரசால், பாதுகாப்பு கருதி வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தாயார் சரிகா மும்பையில் உள்ள வீட்டிலும் தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார். அக்ஷரா ஹாசன், கமல்ஹாசன் இருவரும் சென்னையில் தனி, தனி வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலைமை கொஞ்சம் கடினம் தான். ஆனாலும் மற்றவர்களின் நலன் கருதி பின்பற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தற்போது என்னுடன் உதவியாளர்கள் யாரும் இல்லை. கிளாரா( […]

Continue Reading

நடிகர் சி. எல். ஆனந்தன் காலமான நாளின்று

அட… அந்த ஹிட்டான பாடல் ஆனந்தன் படத்திலா வருகிறது என்று நாம் வியக்கும் அளவுக்கு அருமை யான பாடல்கள் இவர் நடித்த படங்களில் இடம் பெற்றன. வாள் வீச்சில் புது லாவண்யத்தை கொண்டு வந்தவர் இந்த வாள் வீச்சு வீரர். தமிழ்த் திரையில் எம்.ஜி.ஆர், ரஞ்சன், ஸ்ரீராம் ஆகியோருக்கு அடுத்து வாள்வீச்சில் வல்லவராக இருந்தார் சி.எல்.ஆனந்தன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவருடனும் பல படங்களில் நடித்தவர் சி.எல்.ஆனந்தன். விஜயபுரி வீரன் ஆனந்தன் என்றே ஊடகங்களாலும் மற்றவர்களாலும் இவர் […]

Continue Reading

இயக்குனர் விசு உடல்நலக்குறைவாள் மரணம்

நடிப்பது மட்டும் அல்லாது எழுத்தாளர், இயக்குனர், நாடக நடிகர், தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர் தான் விசு. 1945ஆம் ஆண்டு பிறந்த விசுவின் முழுபெயர் M.R விஸ்வநாதன். இவர் முதன்முதலில் பாலசந்திரனிடம் துணை இயக்குனராக பணியாறினார். அப்போது சிறுசிறு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். விசு நடித்த முதல்படம் ரஜினியின் தில்லு முல்லு அந்த படத்தில் இவர் டப்பிங்கும் செய்துள்ளார். மேலும் குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின் கண்மணி பூங்கா என்ற […]

Continue Reading

2வது திருமணம் செய்த நடிகை அமலா பால்

அமலாபாலுடன் திருமணம் செய்து கொண்டதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டிருக்கார் பாவ்னிந்தர் சிங். ‘தலைவா’ படத்தின் போது இயக்குநர் விஜய்யுடன் காதல் ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்து கொண்டார் அமலாபால். ஆனால், சில வருடங்களிலேயே அவரை டைவோர்ஸ் செஞ்சிட்டு தொடர்ச்சியாக ஆடை மாதிரியான படங்களில் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். பின்னர் சில மாசங்களுக்கு முன்பு அமலாபால் மீண்டும் காதல் வயப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாச்சு. ஆனால், தனது காதலர் குறித்த எந்தவொரு விவரத்தையுமே […]

Continue Reading

கொரோனா விழிப்புணர்வு பணியில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்!

நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. மக்களிடையே பலரும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பேருந்து நிலையத்தில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. கிருமி நாசினியை கட்டுப்படுத்தும் சானிடைசிங் மற்று முகக் கவசம் இலவசமாக பொதுமக்களுக்கு நற்பணி இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது. இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். சாதி […]

Continue Reading

மாபெரும் வெற்றிப் படமாக மாறிய ‘திரெளபதி’

  ஒரு வழியாக மாபெரும் வெற்றிப் படமாக ‘திரெளபதி’ அமைந்துள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் கதைக்களம் உருவாக்கிய சர்ச்சையின் மூலமே இது சாத்தியமாகியுள்ளது. இதனிடையே கரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக தமிழகத்தில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இது தொடர்பாக இயக்குநர் மோகன்.ஜி தனது ட்விட்டர் பதிவில், “கரோனா காரணமாக நேற்றுடன் திரையரங்குகளில் ‘திரெளபதி’ படக் காட்சிகள் முடிந்தன. 18 நாட்கள்… நூறு திரையரங்குகளில்… மாபெரும் சரித்திர வெற்றியாக மாற்றிய பெருமை உங்களையே சாரும்… பாதம் தொட்டு நன்றிகள் […]

Continue Reading

மீண்டும் ஏப்ரலில் தாராள பிரபு

இன்று உலகையே கரோனா வைரஸ் (CoVid-19) பாதிப்பு ஸ்தம்பித்துப் போக செய்திருக்கிறது. தற்போதைய சூழலில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கும் வகையில் நம் நாடு, உலக அளவில் அரசாங்க அமைப்புகள் எடுத்து வரும் முயற்சிகள் பெரிதும் பாராட்டுதலுக்குரியது. கடந்த வாரத்தில் வெளியாகி, உங்களது பேராதரவைப் பெற்ற எங்கள் ‘தாராள பிரபு’ திரைப்படத்தின் திரையிடல் அரசாணைகளுக்கு இணங்க, மார்ச் 31ம் தேதி வரை நிறுத்திவைக்கப் படுகிறது. எங்களது ‘தாராள பிரபு’ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்து வந்த போற்றுதலுக்குரிய அன்பிற்கும் ஆதரவுக்கும் […]

Continue Reading

எவன் சொன்னான் எனக்கு கல்யாணம்ன்னு – நடிகை அனுஷ்கா

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த பாகமதி திரைப்படத்திற்கு பிறகு நடிகை அனுஷ்கா ஒன்றரை ஆண்டு எந்த படத்திலும் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பிறகு தற்போது நடிகர் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோருடன் இணைந்து நிசப்தம் என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இவருடைய திருமணத்தைப்பற்றிய செய்தி வாரா வாரம் விதவிதமாக வந்துக்கொண்டே இருக்கும். ஒரு வாரத்தில் பெரிய தொழிலதிபர், மறு வாரத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் என்று மாப்பிளையை மட்டும் பத்திரிகையாளர்கள் […]

Continue Reading

இந்தியாவின் முதலாவது பேசும் படமான ஆலம் ஆரா வெளியிடப்பட்ட தினம் இன்று (1931)

இந்தியில் பேசி, பாடி நடிக்கப்பட்டு 1931-ல் வெளிவந்தது. இந்தப்படத்தை அர்தேஷிர் இரானி என்பவரது நிறுவனமான இம்பீரியல் ஃபிலிம் கம்பெனி தயாரித்தது. கொஞ்சம் விளக்கமா சொல்வதானால் இன்று கதையே இல்லாமல் திரைப்படங்கள் வருகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திரைப்படத்துறை குழந்தையாக இருந்தபோது, பேசும்மொழி படங்கள் கிடையாது. சத்தம் கிடையாது, மௌன படம் தான் பார்க்க வேண்டும். சைகையும், உடல் அசைவும், உதட்டு அசைவுகளும் அன்று கதையை பார்வையாளர்களுக்கு உணர்த்தின. அதன்பின் தொழில்நுட்ப வளர்ச்சியால் பேசும்மொழி படங்கள் வெளிவந்தன. ‘தி […]

Continue Reading