சினிமா செய்திகள்

உசிலம்பட்டி மக்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடிய இசையமைப்பாளர் இமான்

இந்த வருடம் பொங்கல் திருவிழாவை உசிலம்பட்டி கிராம மக்கள் குழந்தைங்களுடன் கொண்டாடிய இசையமைப்பாளர் D. இமான் அவர்கள்.

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு இசை அமைத்து தன்னுடைய பாடல்களால் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த இசையமைப்பாளர் D.இமான் அவர்கள், உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் நடத்திய பாட்டுப்போட்டி, நடன போட்டியில் கலந்துகொண்டு அங்குள்ளவர்களை மிகவும் சந்தோஷப்படுத்தி உள்ளார். இவர் தனக்கென்று ஒரு TRUST ஆரம்பித்து, அதன் மூலமாக பல உதவிகளை செய்து கொண்டு வருகிறார். உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்தும், பல உதவிகளை தேடி போய் செய்தும் வருகிறார்.

இசையமைப்பாளர் இமான் அவர்கள் ஊசிலம்பட்டிக்கு சென்று அங்குள்ளவர்களை ஊக்குவித்தது மதுரை மாவட்ட உசிலம்பட்டி மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விழாவை FRIENDS FILM FACTORY TEAM அவர்களும் BUTTERFLY NETWORK TEAM இருவரும் ஊருதுணையாக இருந்து விழாவை சிறப்பித்து கொடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *