சினிமா செய்திகள்

‘‘அப்புக்குட்டிக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும்’’ ‘சூரியனும் சூரியகாந்தியும்’ படஇயக்குனர் ஏ.எல்.ராஜா உறுதி.

பார்த்திபன், தேவயானி நடிப்பில், ‘நினைக்காத நாளில்லை’, ‘தீக்குச்சி’ மற்றும் தெலுங்கில் ‘அக்கிரவ்வா’ ஆகிய படங்களை தொடர்ந்து, ஏ.எல்.ராஜா இயக்கியுள்ள புதிய படம் ‘சூரியனும் சூரியகாந்தியும்.’

நினைக்காத நாளில்லை படத்தில் வடிவேலு, பார்த்திபன் இருவர் கூட்டணியில் ‘ஹலோ யார் பேசறது… நீ தான்டா பேசுற…’ காமெடி, தீக்குச்சி படத்தில் நரிக்குறவனாக வடிவேலு படம் முழுவதும் செய்த காமெடி போல், விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடிகளும், விறுவிறுப்பான காட்சிகளும், இந்தப் படத்திலும் இடம் பெற்றுள்ளது.

டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகும் இந்தப் படத்தில் அப்புக்குட்டி, ஸ்ரீஹரி, விக்ரம் சுந்தர் மூவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். ரிதி உமையாள் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் சந்தான பாரதி, இயக்குனர் செந்தில் நாதன், ராஜசிம்மன், இயக்குனர் ஏ.எல்.ராஜா, மங்களநாத குருக்கள், அழகு, செஞ்சி கே.அசோகன், சக்தி சொரூபன், ஏ.ஆர்.கே.ஆனந்த், சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, சச்சின், ரிந்து ரவி ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஏ.எல்.ராஜா இயக்குகிறார். ஒளிப்பதிவு திருவாரூர் ராஜா, இசை ஆர்.எஸ்.ரவி பிரியன், எடிட்டிங் வீர செந்தில்ராஜ், டான்ஸ் மாஸ்டர் மஸ்தான், பாடல்கள் ஏ.எல்.ராஜா, கவிஞர் செங்கதிர் வாணன். பாடியவர்கள் வேல் முருகன், முகேஷ், நேகா ஆகியோர் படத்தின் இனிமையான பாடல்களை பாடியுள்ளனர். சண்டைப் பயிற்சி ஸ்பீடு மோகன், கலை ஜெயசீலன். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். இணைத் தயாரிப்பு டெய்லி குருஜி, தயாரிப்பு ஏ.எல்.ராஜா.
‘‘சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லுதல் பாவம்” என்ற பாரதியாரின் பாடல் தான் கதையின் மையக் கருத்து. சூரியன் மேல் காதல் கொண்ட சூரியகாந்தி பூப்போல, கதாநாயகி, நாயகனை காதலிப்பதும், காதலுக்குள் சாதிப் பேய் நுழைந்து, என்ன செய்கிறது என்பதும் தான் ‘சூரியனும் சூரியகாந்தியும்’ படத்தின் கதை’’ என்னும் இயக்குனர், இந்த படம் மூலம் நடிகர் அப்புக்குட்டிக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும்’’ என்கிறார்.
பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களால் படம் தொடங்கப்பட்டு, நான்கு பாடல்கள், மூன்று சண்டைக் காட்சிகளுடன், மதுரை, தேனீ, திண்டுக்கல், மைலம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில், முப்பத்தைந்து நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்று, தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *