‘உறியடி’ இயக்குனரின் அடுத்த படம்
‘உறியடி’ வெற்றிப் படம் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த விஜய்குமார், ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். இந்த படத்தை ‘சேத்துமான் புகழ்’ தமிழ் இயக்குகிறார்.
கிராமப்புற பின்னணியில் அரசியல், ஆக்ஷன், காதல், கலந்த குடும்ப பாங்கான திரைப்படமாகவும், ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாகவும் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக தொடர்ந்து 60 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, படக்குழு.
கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். முக்கிய கேரக்டர்களில் திலீபன், பாவெல் நவகீதன், மரியம் ஜார்ஜ் நடிக்கின்றனர்.
96 படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வஸந்தா இசையமைக்கிறார்.
CS பிரேம் குமார் எடிட்டராகவும், ஸ்டன்னர் சாம் சண்டை பயிற்சியாளராகவும், ஏழுமலை கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.