சினிமா செய்திகள்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு & பலர் நடிக்கும் மாநாடு படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பாண்டியில் துவங்க உள்ளதாம்.

கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், கொரோனா தொற்று காரணமாக படக்குழுவினருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டுவிட கூடாது என முடிவு செய்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படக்குழுவினரின் பாதுகாப்பு நடவடிக்கையாக சித்த மருத்துவர் வீரபாபுவிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

சித்த மருத்துவர் வீரபாபுவின் மேற்பார்வையில் படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் படக்குழுவினருக்கு தினசரி காலை, மாலை என இரு வேளைகளிலும் மூலிகை கசாயம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி படக்குழுவினருக்கு அவரது வழிகாட்டுதலின்படி ஆரோக்கியமான உணவுமுறையும் பின்பற்றப்படுகிறது.

சொல்லப்போனால், கொரோனா தொற்றில் இருந்து படக்குழுவினரை பாதுகாப்பதற்காக, படப்பிடிப்பு தளத்திலேயே ஒரு மருத்துவ குழுவினர் கூடவே இருந்து, கவனித்து கொள்ள செய்துள்ள ஏற்பாடு என்பது இதான் முதன்முறை.. அந்தவகையில் படக்குழுவினர் அனைவரும், கொரோனா தாக்கம் குறித்த எந்த அச்சமும் இன்றி படப்பிடிப்பில் ஈடுபடுவாகள் என்ற நம்பிக்கையாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *