சினிமா செய்திகள்நடிகர்கள்

சிங்கம்பட்டி ஜமீன் மன்னர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி..!!

எனது திருநெல்வேலி ரசிகர்மன்றத் தலைவர் காந்திபாண்டியன்
சிங்கம்பட்டி ஜமீன் ராஜா
இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியை எனக்கு அனுப்பியிருந்தார்..!
அந்த செய்தியைப்படித்தவுடன் மனது பதைபதைத்தது ..!நமது ராஜா இறந்த
செய்தி கேட்டு
மிகவும் வருந்துகிறேன்..!

உயரிய எண்ணமும் தன்னம்பிக்கையும் இறைஅருளும் கொண்ட ஜமீன் ஐயாவின் மறைவு
நம் தமிழ் நாட்டிற்கே
மிகப் பெரிய இழப்பாகும்…!
நம் நாட்டின் கடைசி மன்னர் அவர்..!
அவர் பல சாதனைகள் செய்து வரலாற்றில் தனது வாழ்க்கையை பதியவைத்துவிட்டுச் சென்றுள்ளார்..!
மன்னரின் மறைவு நம் மக்களுக்கு பெரும் துயராகும்..!
பேரிடியாகும்..!!

அவரை இழந்து வாடும் சிங்கம்பட்டி ஜமீன் மக்களின் துன்பத்தில் நானும் பங்கு கொள்ள இயலவில்லை என்பதால்
எனது வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்களையும் இந்தப் பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்..!!

இந்த தருனத்தில்
அவருக்கும் எனக்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பையும்
நட்பையும் இந்த பதிவில் உங்களுக்கு
தெரிவிக்க வேண்டும்
என்று நினைக்கிறேன்..!

நான் அன்புச் சகோதரர் சிவகார்த்திகேயனோடு
சீமராஜா என்ற திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீனாக மறைந்த மன்னரைப்போன்று வேடமேற்று நடித்த பெருமை எனக்கு கிடைத்தது…!
அந்த திரைப்படத்தை அவரின் அரண்மனையிலேயே படம் பிடித்தோம்…!
படப்பிடிப்பு முதல் நாள் அன்று காலையிலேயே அவரைச் சந்தித்து முதலில் ஆசீர்வாதம் வாங்கினேன்…!
அப்பொழுது அவரிடம் இந்தப் படத்தில் உங்களைப் போன்று ராஜா வேடமிட்டு நடிக்கிறேன் என்ன கூறினேன்..!
நீ ராஜா மாதிரிதான் இருக்கிறாய் நல்ல பொருத்தமாக இருக்கிறது , நீ நன்றாக நடிப்பாய் என்று மனதார வாழ்த்தினார்…!
உடனே அருகில் இருந்த அவரது உதவியாளர் ஒருவர் உங்களுக்கு ராஜ திருஸ்டி கிடைத்துவிட்டது
ராஜாவே சொன்னதால் என்று கூறினார் ..!
உடனே ராஜா
ஆமாம் ஆமாம்..!
என் கண்ணு படக்கூடாது பட்டுவிட்டது அதனால் உனக்கு இன்று இரவு உடல் நிலை சற்று பாதிப்பு ஏற்படும், ஆனால் பயப்பட வேண்டாம், நாளை ஒருநாளில் எல்லாம் சரியாகிவிடும் என்று ஒரு மந்திரம் சொல்லி என்னை ஆசீர்வாதம் செய்தார்..!
நானும் சும்மா விளையாட்டுக்கு கூறுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு நடிக்கச்
சென்றுவிட்டேன்..!

மாலையில் படப்பிடிப்பு குழுவினர் நாங்கள் அனைவரும் தங்கியிருந்த திருநெல்வேலி விடுதிக்கும் வேலை முடிந்தவுடன் சென்றுவிட்டோம்..!
ஆனால்,
அவர் கூறியதுபோல அன்று இரவு எனக்கு 103டிகிரி காய்ச்சல் வந்துவிட்டது ..!
ஆனால் அடுத்த நாள் காலையில் அவர் தொன்னது போல சரியாகிவிட்டது ..!
என்ன ஆச்சரியம் ..!
அதைக்கண்டு வியந்தேன்..!

அவருக்குள் உண்மையில் ஏதோ ஒரு தெய்வசக்தி உள்ளது என்று மட்டும் புரிந்துகொண்டேன்..!
3 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த சம்பவம் என் மனதில் இப்பொழுதும் வந்து நிழலாடியது…! எப்பொழுதும் என்னால் மறக்க முடியாதது..!
இவ்வுலகில் நீங்காபுகழைப் பெற்ற அந்த அற்புத மனிதர்
சிங்கம்பட்டி ஜமீன் வாழ்க..!
மாமனிதர் மன்னர் வாழ்க..!!

திரைப்படத்தில் ஒரு மாதம் ராஜ வேடமிட்டு நடித்ததற்கே எனக்கு பேரும் புகழும் கிடைத்தது என்றால்..!
நிஜமான அந்த ராஜாவுக்கு கிடைக்கின்ற புகழ் காலத்தால் அழிக்க முடியாதது…!
ஐயாவின் புகழ் வாழ்க ..!
மன்னரின் புகழ் வளர்க…!
அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..!!
என்றும்
உங்கள்
அன்புள்ள
நெப்போலியன்
அமெரிக்காவில் இருந்து மிகுந்த வருத்தத்தோடு இதை பதிவு செய்கிறேன்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *