சுழல்-2 இணையத்தொடர் விமர்சனம்
முதல் பாகத்தின் தொடர்ச்சி தான் இரண்டாம் பாகம் என்றாலும், முதல் பாகத்தை விட இதில் காட்சி அமைப்புகள் இன்னும் மிரட்டலாக அமைந்திருப்பது சிறப்பு.
முதல் பாகத்தில் சொந்த சித்தப்பாவாலேயே பாலியல் பலவந்தம் பண்ணப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ், துப்பாக்கியால் சுட்டு சித்தப்பாவை சாகடிக்கிறார். அதற்காக
கைதாகி ஜெயிலில் இருக்கும் ஐஸ்வர்யாவுக்காக வாதாடுகிறார், பிரபல வழக்கறிஞர் லால்.
கிட்டத்தட்ட வழக்கு வெற்றி பெறும் நிலையில் நான் அவரது கடற்கரை பங்களாவில் பிணமாக கிடக்கிறார், அதுவும் தலையை தோட்டா துளைத்த நிலையில்.
வழக்கை சப்-இன்ஸ்பெக்டர் கதிரிடம் ஒப்படைக்கும் டி.ஐ.ஜி. அந்த ஏரியா காவல் நிலைய ஆய்வாளர் சரவணனுடன் இணைந்து செயல்பட உத்தரவிடுகிறார். ஆய்வாளர் சரவணன் அது தற்கொலை தான் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
ஆனால் அது கொலை என்பதற்கு ஆதாரமாக லால் கொலை செய்யப்பட்ட வீட்டில், வெளியே தாழிடப்பட்ட மர அலமாரிக்குள் கையில் துப்பாக்கியுடன் கெளரி கிஷன் இருப்பது தெரிய வர…
இப்போது நடந்தது கொலை என்று முடிவு செய்து கௌரி கிஷ னை கைது செய்கிறார்கள். போலீஸ் விசாரணையில் அவர் பலத்த மௌனம் சாதிக்கிறார்.
இப்போது போலீசுக்கு ஒரு சந்தேகம்.. அப்படியே கொலை செய்துவிட்டு அவர் அலமாரியில் ஒளிந்திருந்தாலும் அந்த அலமாரியின் வெளிப்பகுதியை
பூட்டியது யார் எந்த கேள்வி விசாரணை அதிகாரி கதிரின் மண்டையை குடைய…
இந்நேரத்தில் இன்னொரு அதிர்ச்சியாக மாவட்டத்தின் வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்கறிஞர் லாலை கொலை செய்ததாக 7 இளம் பெண்கள் சரணடைகிறார்கள்.
அவர்களும் கொலை கொலை செய்த காரணம் குறித்து வாய் திறக்க மறுக்கிறார்கள்
8 பெண்கள் ஒரு கொலை வழக்கில் சரணடைந்தாலும், அவர்கள் அனைவருக்கும் இடையே அதுவரை எந்தவித தொடர்பும் இல்லாததும், அவர்களின் பின்னணி குறித்த எந்தவித தகவல்களும் கிடைக்காததும், காவல்துறை விசாரணை மேற்கொண்டு நகர மறுக்க… வழக்கறிஞர் லாலை கொண்டதாக ஒருவர் சரணடைந்தால் சரி. எதற்காக எட்டு பெண்கள் சரணடைய வேண்டும்? உண்மையான குற்றவாளி இந்த எட்டு பேரில் ஒருவரா? ஒருவேளை இவர்கள் இல்லையென்றால் வேறு யார் கொலையாளி என்பதை சஸ்பென்ஸ் முடிச்சுகளோடு கொஞ்சமா எதிர்பார்ப்பு குறையாமல் தந்து இருக்கிறார்கள்.
முதல் பாகத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பாவை கொன்ற ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த பாகத்தில் சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
வழக்கறிஞர் லால் கொலை வழக்கில் கைதான எட்டு பெண்களையும் சிறையில் ரகசியமாய் கண்காணிக்கும் பொறுப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ். கிளைமாக்சில் சிறைக்குள் எதிரிகளின் கொலை வெறி தாக்குதலில் இருந்து எட்டு பெண்களையும் காப்பாற்ற போராடும் தருணத்தில் நடிக்கும் துடிப்புமாய் பதற்றமுமான ஐஸ்வர்யாவை அந்த நடிப்பு சிகரம் ஏற்றி பார்க்கிறது.
விசாரணை அதிகாரி கதிர் மேல் அவ்வப்போது எரிச்சலைக் கொட்டும் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் சரவணன் சாலப் பொருத்தம் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் விசாரணை அதிகாரியாக நடிப்பில் பிரகாசிக்கிறார், கதிர்.
வழக்கறிஞர் லால் நல்லவரா கெட்டவரா என்ற கோணத்தில் போகும்புஷ்கர்- காயத்ரியின் திரைக்கதை திருப்பங்களுடன், சமூக பிரச்சனையையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதில் கதையின் கனம் கூடி விடுகிறது. இயல்பான நடிப்பில் லால், அவரது மனைவியாக புது நெல்லு புது நாத்து அஸ்வினி அனுபவ நடிப்பில் நமக்குள் கடக்கிறார்கள்.
மஞ்சிமா மோகன் அவரது காதல் கணவர் கயல் சந்திரன் தொடர்பான காட்சிகள் தொடரில் முக்கிய இடம் பிடிக்கிறது. தப்போ சரியோ, முதலாளி எதை சொன்னாலும் செய்ய வேண்டும் என்கிற கயல் சந்திரனின் கண் மூடித்தனமான அந்த விசுவாசம் பகீர் ரகம் என்றாலும், சந்திரன் நடிப்பில் முழு நிலவாக பிரகாசிக்கிறார்.
எட்டு சிறுமிகளின் உயிரை காப்பாற்ற மஞ்சிமா மோகன் மேற்கொள்ளும் பகீரத முயற்சி ஒவ்வொன்றும் தாய்மையின் அவதாரமாக அவரை தூக்கி நிறுததுகிறது. மீனவர் தலைவராக நேர்மையின் பிரதிபலிப்பாக வரும் டெலிபோன் ராஜ் அந்த கனமான பாத்திரத்தை நடிப்பில் அழகாக சுமந்து இருக்கிறார். இதுவரை பெரிய திரையில் காமெடி நடிகராகவே பார்த்த அவருக்குள் இப்படி ஒரு குணச்சித்திரமா என்று வியக்க வைக்கிறார். (இனி பெரிய திரையிலும் இவரை குணச்சித்திர நடிகராக காண முடியும் என்று நம்பலாம்.)
ஒளிப்பதிவாளர் ஆபிரகாம் ஜோசப்பின் கேமரா தசரா திருவிழாவை கண்முன் காட்டி பிரமிக்க வைக்கிறது. இந்த காட்சிகளில் பணத்தைக் கொட்டி நிழலை நிஜமாக்கிய தயாரிப்பாளருக்கு ஒரு ராயல் சல்யூட்.
சாம் சி.எஸ்.சின் பாடல்களும் பின்னணி இசையும் கதையோடு நம்மை பிணைத்து விடுகிறது.
புஷ்கர்-, காயத்ரியின் திரைக்கதையை பிரம்மா, சர்ஜுன் இயக்கி இருக்கிறார்கள்.
கொலை விசாரணையில் எதிர்பாராத திருப்பங்கள், கொலைக் குற்றவாளி யார் என்று அதுவரை ஊகிக்க முடியாத கிளைமாக்ஸ் என்று படத்தை ரசிகனின் இதயத்தோடு நெரு க்கமாக்கி விடுகிறார்கள்.
திகில் உலா. ஆனால் திவ்ய உலா.