ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உநடிப்பில் உருவான ‘பத்து தல’ திரைப்படம் மார்ச் 30-ந் தேதி வெளியாக இருப்பதையொட்டி, செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.
விழாவில் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா பேசியதாவது் “கோவிட் உள்ளிட்ட பல தடைகளைத் தாண்டி இந்தப் படத்தை சிறப்பான ஒன்றாக இயக்குநர் கிருஷ்ணா கொடுத்திருக்கிறார். ’சில்லுன்னு ஒரு காதல்’ மூலம் எங்கள் பயணம் தொடங்கியது. இந்தப் படம் இன்றளவும் பல குடும்பங்களுக்குப் பிடித்த ஒன்று. அந்தப் படத்திற்குப் பிறகு இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் கிருஷ்ணாவுடன் இணைவதில் மகிழ்ச்சி. படம் நிச்சயம் வெற்றியடையும். ரஹ்மான் சாருடன் எனக்கு இது மூன்றாவது படம். தொழில் நுட்பக் குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. சாயிஷாவுக்கு ஸ்பெஷல் நன்றி. தமிழ்நாட்டின் ரன்பீர் கபூர் என்று சொல்லும் அளவுக்கு கெளதம் கார்த்திக்கிடம் ஒரு வசீகரம் இருக்கிறது. எனக்கு சூழ்நிலை சரியில்லாதபோது படம் எஸ்.டி.ஆர். எனக்கு பண்ணி கொடுத்தார். அவருக்கும் நன்றி. கமல்ஹாசன் சார் தயாரிப்பில் அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்கும் அவருக்கு வாழ்த்துகள்.’’
இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா பேசியதாவது. “பலரும் இந்தப் படம் நன்றாக வரவேண்டும் என்று நினைத்தார்கள். அதன் பிரதிபலிப்பு தான் இது. மிகப்பெரிய பொருட்செலவில் இதனை ஞானவேல்ராஜா எடுத்திருக்கிறார். முதல் 15 நாட்கள் எடுத்து விட்டு பிறகு, மீண்டும் ரீஷூட் செய்ய வேண்டும் என்பது சாதாரண விஷயம் கிடையாது. எஸ்.டி.ஆரை வைத்து படம் செய்வது சாதாரணம் கிடையாது. ஏனெனில், பார்வையாளர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும். அதை நாம் திருப்திப்படுத்த வேண்டும். இது சிம்புவால் எனக்கு எளிதானது. செட்டில் வரும்போதே அவர் ஏ.ஜி.ஆராகவே வாழ்ந்தார். இதற்காக என் நண்பன் எஸ்.டி.ஆர்.ருக்கு வாழ்த்துகள்.
கெளதம் கார்த்திக்கை நிறைய கொடுமைப் படுத்தி இருக்கிறேன். ஆக்‌ஷன், புழுதி என கடினமான சூழலில் அவருக்கு படப்பிடிப்பு நடத்தினோம். சிறப்பாக செய்திருக்கிறார். கெளதம் மேனன் என்னுடைய பாஸ். சிறப்பான வில்லன். இதுவரை பார்த்திராத அவரது இன்னொரு முகத்தைப் பார்க்கலாம். பிரியா பவானி ஷங்கருக்கும் நன்றி.
எஸ்.டி.ஆருக்கு தங்கை கதாபாத்திரம் நடிக்க தென்னிந்தியாவில் ஒரு நடிகையும் தயாராக இல்லை. ஒத்துக் கொண்ட ஒரே நடிகை அனுசித்தாரா மட்டும் தான். அவருக்கும் நன்றி.
மனுஷ்யபுத்திரனுக்கு கவிதை, அரசியல் என பல தளங்கள் காத்திருந்தும் என் நட்புக்காக ஓடி வந்தார். மது குருசாமிக்கும் நன்றி. கேட்டதும் சாயிஷா உடனே ஒத்துக்கொண்டு இந்தப் பாடலை செய்து கொடுத்தார். இந்தப் பாடல் இவ்வளவு நன்றாக வரக் காரணம் சாயிஷா, ரஹ்மான் இசை, பிருந்தா மாஸ்டர் மூவரும் தான். இப்போது படத்தின் பின்னணி இசையை ரஹ்மான் சார் செய்து கொண்டிருக்கிறார். அது நிச்சயம் பேசப்படும். என் தொழில்நுட்பக் குழு என்னுடைய பலம். அவர்கள் அனைவருக்கும் நன்றி”
வசனகர்த்தா ஆர்.எஸ். ராமகிருஷ்ணா பேசியதாவது. “கிருஷ்ணா நல்ல இயக்குநர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர். அவரிடம் எப்போதும் ஒரு சென்டிமென்ட் உண்டு. அவர் வைத்து படம் செய்கிறவர்களுக்கு கண்டிப்பாக கல்யாணம் நடக்கும். அதுபோல நல்லது நடக்கும் என எதிர்பார்க்கலாம். ரஜினி சாரும் கமல் சாரும் கலந்த கலவையாகதான் சிம்பு சாரை பார்க்கிறேன். இந்தப் படத்தில் ‘நாயகன்’ கமல் சாரையும், ‘தளபதி’ ரஜினியையும் பார்ப்பீர்கள். ‘பத்து தல’ தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு ட்ரேட் மார்க்காக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துகள்”.
அடுத்ததாக ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே. பாட்ஷா, “டீசர், ட்ரைய்லரில் பார்த்தது போல, படத்திலும் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் சிம்பு மிகவும் ஈடுபாட்டோடு நடித்துக் கொடுத்தார். ஆதரவு கொடுத்த தொழில்நுட்பக் குழு அனைவருக்கும் நன்றி”.
நடிகர் கண்ணன் பொன்னையா பேசியதாவது, “’பத்து தல’ ஒரு மாஸ் எண்டர்டெயினர் படம். இந்தப் படத்தை அதிக பொருட்செலவில் எடுத்துள்ளனர். இந்த மூன்று வருடத்தில் தயாரிப்பாளர் எங்களை நன்றாக பார்த்துக் கொண்டார். அனைத்து நட்சத்திரங்களுக்கும் சமமான காட்சிகள் கொடுத்த இயக்குநர் கிருஷ்ணா திறமையானவர். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்திற்குப் பிறகு என்னை ஞாபகம் வைத்துக் கொண்டு ‘பத்து தல’ படத்தில் சிம்பு வந்து என்னிடம் பேசினார். கெளதம் கார்த்திக் திறமையானவர். இந்தப் படத்தில் வேறு ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக இருப்பார். பிரியா பவானி ஷங்கர் படத்தில் பவர்ஃபுல்லான லேடியாக வருவார். இந்தப் படம் எனக்கு நல்ல அடையாளம் கொடுக்கும் என நம்புகிறேன்”.
எழுத்தாளர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசியதாவது. “சினிமா மேடை எனக்கு புதிதானது. நண்பர் கிருஷ்ணாவுக்காக ஒத்துக் கொண்டேன். சினிமாவை வெளியில் இருந்து பார்த்த எனக்கு உள்ளிருந்து வேலை செய்வது புதிதாக இருந்தது. இந்தப் படம் மாஸ் எண்டர்டெயினராக வர இயக்குநரும் குழுவும் அவ்வளவு உழைப்பைக் கொடுத்துள்ளார்கள். ஆக்‌ஷன் சொன்னதும் எஸ்.டி.ஆர். வேறொருவராக மாறி விடுவார். நடிப்பு அவரது ரத்தத்தில் ஊறி இருக்கிறது. ரஹ்மான் சார் இசையில் நான் பாட்டெழுதத் தான் ஆசைப்பட்டேன். ஆனால், அவர் இசையமைக்கும் படத்தில் நடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. படம் வெற்றியடைய வாழ்த்துகள்.”
நடிகர் சவுந்தர்ராஜன் பேசியதாவது. “இந்தப் படம் நான் ஒத்துக்கொள்ள முக்கிய காரணம் எஸ்.டி.ஆர்., இயக்குநர் கிருஷ்ணா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் சார். ரசிச்சு ரசிச்சு பார்த்த எஸ்.டி.ஆருடன் படம் முழுக்க அவருடன் இணைந்து நடிக்கப் போகிறேன் என்றதும் மகிழ்ச்சியாக இருந்தது. சின்ன ரோல் இருக்கிறது என்று டைரக்டர்சொன்னதும் அடுத்த படங்களில் பெரிய வாய்ப்பு வேண்டும்’ என்ற வேண்டுகோளோடு ஒத்துக் கொண்டேன். இயக்குநர் எந்தவித டென்ஷனும் இல்லாமல் அழகாக படத்தை முடித்துக் கொடுத்துள்ளார். ஞானவேல் சார் கதை பிடித்திருந்தால் படத்தை எடுத்துக் கொள்ளக்கூடியவர். படத்தின் அடுத்த பார்ட்டும் வரவேண்டும்”
நடிகர் ரெடின் கிங்க்ஸ்லே பேசியதாவது. “பத்து வருடங்களுக்கு முன்பே சிம்பு சாருடன் ‘வேட்டை மன்னன்’ நடித்து வெளி வந்திருக்க வேண்டும். ஆனால், ‘பத்து தல’யில்தான் அது அமைந்திருக்கிறது. வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள். கெளதம் சார் நாலு மணிக்கே எழுந்து ஆக்‌ஷன் காட்சிகளுக்கு தயாராவார். அப்படியான திறமையான நடிகர் அவர். ரஜினி சாரிடமும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடையும் என சொல்லி இருக்கிறேன்”.
நடிகை சாயிஷா பேசியதாவது, “நான் மீண்டும் என் வீட்டுக்கு வந்தது போல ஒரு உணர்வு ‘பத்து தல’ படப்பிடிப்பில் ஏற்பட்டது. இந்த சூப்பரான பாடலை ரஹ்மான் சார் இசையில் பிருந்த மாஸ்டர் நடன அமைப்பில் கொடுத்ததற்கு நன்றி. கெளதம் இந்தப் படத்தில் வேறு நபராக இருக்கிறார். அவரது உழைப்புக்கு வாழ்த்துகள். எஸ்.டி.ஆருடன் நான் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், அவரது இந்தப் படத்தில் நானும் ஒரு அங்கம் என்பது மகிழ்ச்சி. கடைசியாக எனக்கு எல்லாவிதமான ஆதரவும் கொடுத்த என் கணவர் ஆர்யாவுக்கு நன்றி. அவர் சொல்லித்தான் இந்தப் பாடல் நான் செய்தேன். அவரைப் போன்ற ஒரு கணவர் கிடைத்ததுக்கு நான் கொடுத்திருக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் இந்தப் பாடல் நிச்சயம் பிடிக்கும்”.
நடிகர் மதுகுருசாமி பேசியதாவது, “கன்னட ‘மஃப்டி’ படத்தில் நான் நடித்த சிங்கா எனும் கதாபாத்திரத்தையே தமிழிலும் நான் ஏற்று நடித்திருக்கிறேன். கன்னடத்தில் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். தமிழில் ‘பத்து தல’ என் முதல் படம். இந்த வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர் ஞானவேல் சாருக்கு நன்றி. கிருஷ்ணா சார் ‘பத்து தல’ படத்தை அருமையாக எடுத்திருக்கிறார். எஸ்.டி.ஆர். சாரிடம் இருந்து நிறைய கற்றுள்ளேன். உங்கள் அனைவருக்கும் படம் கண்டிப்பாக பிடிக்கும்”.
நடிகர் கெளதம் கார்த்திக் பேசியதாவது. “பத்து தல’ படத்தில் கிருஷ்ணா சாரும் அவரது டீமும் அருமையாக வேலை பார்த்திருக்கிறார்கள். என்னுடைய மொத்தத் தோற்றத்தையுமே மாற்றி இருக்கிறார்கள். இந்த கதாபாத்திரத்தில் என்னை பார்க்கும்போதே பெருமையாக இருக்கிறது. என்னை கொடுமைப் படுத்தி இருப்பதாக இயக்குநர் சொன்னார். இந்த தொழிலுக்கு வந்துவிட்டு வேலை பார்ப்பதை எப்போதும் நான் கொடுமையாகவே நினைத்தது இல்லை. நான் பிறப்பதற்கு முன்பே என் தாத்தா இறந்து விட்டார். அவரது தொழிலில் நான் இறங்கி பார்க்கிறேன் என்றால் அதை விட வேறு சந்தோஷம் இல்லை. இது என் கோயில். அதுதான் எனக்கு சாப்பாடு போடுகிறது . அதற்காக எந்த விஷயத்தையும் நான் தாங்கிக் கொள்வேன். சாயிஷாவுடன் நடனம் ஆட பயமாக இருந்தது. சாயிஷாவுக்கு இணையாக நடனம் ஆட முடியாது என பிருந்தா மாஸ்டரிடம் கேட்டு எனக்கு நடனத்தைக் குறைத்துக் கொண்டேன்.அடுத்து சிம்பு அண்ணன். இசை வெளியீட்டு விழாவில் அவர் என்னைப் பற்றி பேசியதை கேட்டு நான் அழுது விட்டேன். அவருடைய ரசிகர்களில் நானும் ஒருவன்.
படப்பிடிப்புத் தளத்தில் வேலையையும் மீறி அவர் என்னிடம் சில கதைகளை சொன்னார். அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. என்ன கதாபாத்திரம் என்றாலும் சரி அவர் எப்போது கூப்பிட்டாலும் சம்பளமே வாங்காமல் செல்லத் தயாராக இருக்கிறேன். கூப்பிடுங்கள் அண்ணா. திரையரங்குகளில் ‘பத்து தல’ பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
படத்தின் நாயகன் சிலம்பரசன் பேசியதாவது. “இயக்குநர் கிருஷ்ணா இந்த படத்தை மிக சிறப்பாக இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் எனக்கு தான் அதிக வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாக சிலர் கூறினார்கள். ஆனால், அப்படி எதுவும் இல்லை. படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் சமமான வாய்ப்பு கொடுத்திருக்கும் இயக்குநர் கிருஷ்ணா அனைவரையும் மிக சரியாக பயன்படுத்தியிருக்கிறார். கடைசியாக விக்ரம் படத்தில் தான் அப்படி அனைத்து நடிகர்களுக்கும் சரியான வாய்ப்பு கொடுத்திருப்பார்கள். அது மிகவும் பிடித்திருந்தது.

அந்த படத்திற்கு பிறகு ‘பத்து தல’ படத்தில் அதை கிருஷ்ணா செய்திருக்கிறார். படப்பிடிப்பின் போதே நான் அவரிடம் ‘கெளதமுக்கு அதிகமான காட்சிகள் வைங்க’ என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். காரணம், படம் வெளியீட்டுக்கு முன்பு எதை வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் படம் வெளியான பிறகு பேசக்கூடாது அதனால் தான் கிருஷ்ணாவிடம் கேட்டுக்கொண்டே இருப்பேன், அவர் நான் நினைப்பதை புரிந்து கொண்டு, நிச்சயம் அனைவருக்கும் சமமான வாய்ப்பு படத்தில் இருக்கும் என்றார். படப்பிடிப்பின் போது அது தெரியவில்லை, படம் பார்த்த பிறகு அனைவருக்கும் முக்கியத்துவம் இருப்பது தெரிகிறது. படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் எதாவது ஒரு இடத்தில் முக்கியத்துவம் இருக்கும் வகையில் கிருஷ்ணா படத்தை இயக்கியிருக்கிறார். அவருடைய திறமைக்கு அவர் இந்த படத்திற்கு பிறகு பல உயரங்களை தொடுவார்.
சாயிஷா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். அவர் சிறந்த டான்ஸர் என்பது நமக்கு எல்லாம் தெரியும். இந்த படத்திற்காக அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதற்கு நன்றி. அவருடைய நடனம் படத்திற்கு பலம் சேர்த்திருப்பதை மறுக்க முடியாது.
கெளதம் கார்த்திக்காக தான் இந்த படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொண்டேன். இதை படத்தின் இசை விழாவிலும் சொன்னேன். இந்த படத்திற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார், மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். அந்த கஷ்டங்களை ஜாலியாக எடுத்துக் கொண்டதாக அவரே மேடையிலும் சொன்னார். கஷ்டமான விஷயங்களை ஜாலியாக எடுத்துக்கொள்பவர்கள் என்றுமே வாழ்க்கையில் தோல்வியடைய மாட்டார்கள், அது தான் உண்மை. கெளதம் கார்த்திக் மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார். சண்டைக்காட்சியில் நடிக்கும் போது சிலருக்கு செட்டாகாதது போல் தோன்றும். ஆனால், கெளதம் கார்த்திக் சண்டைக்காட்சிகளில் நடிக்கும் போது மிக சிறப்பாக இருக்கும். டூப் இல்லாமல் நடிப்பது என்பது வேறு விஷயம், நான் கூட பல படங்களில் செய்திருக்கிறேன். ஆனால், எது நடந்தாலும் பரவாயில்லை என்ற ரீதியில் ஒருவர் சண்டைக்காட்சியில் நடிப்பது என்பது வேறு லெவல், அப்படிப்பட்ட சண்டைக்காட்சிகளில் தான் கெளதம் நடித்திருக்கிறார். அவர் பல படங்களில் சண்டைக்காட்சிகளில் நடித்தாலும், இந்த படத்தில் அவருடைய சண்டைக்காட்சிகள் மிக சிறப்பாக இருக்கும். நானே படப்பிடிப்பில் அவரது சண்டைக்காட்சிகளை ரசித்து பார்த்துக் கொண்டு இருப்பேன்.

இயக்குநர் கெளதம் மேனன் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ இரண்டாம் பாகம் பண்ண முடியாது என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, எனக்காக பல கஷ்டங்களை தாங்கிக் கொண்டார். அவர் இல்லை என்றால் இந்த படம் இவ்வளவு பெரிய படமாக வந்திருக்காது. படம் பற்றி இப்படி பேசவும் மாட்டார்கள். மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடித்திருக்கிறார். அவருக்காகவே படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும்.

ஏ.ஆ.ரஹ்மான் சார் இந்த படத்தின் டிரைலர் பணியை இரண்டு நாட்களில் முடித்துக் கொடுத்தார். இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, பிறகு அவருடைய இசை நிகழ்ச்சியை முடித்து விட்டு லண்டன் சென்றார். அங்கு பொன்னியின் செல்வன் பணியை முடித்துவிட்டு, இப்போது மீண்டும் இங்கு வந்து ‘பத்து தல’ பின்னணி இசை சேர்ப்பு பணிகளை செய்து வருகிறார். அவரைப் போன்று ஒரு மகத்தான மாமனிதரை பார்க்க முடியாது. அவரது மகன் அமீன் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார் அவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/maxresdefault-1024x576.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/maxresdefault-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உநடிப்பில் உருவான ‘பத்து தல’ திரைப்படம் மார்ச் 30-ந் தேதி வெளியாக இருப்பதையொட்டி, செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. விழாவில் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா பேசியதாவது் “கோவிட் உள்ளிட்ட பல தடைகளைத் தாண்டி இந்தப் படத்தை சிறப்பான ஒன்றாக இயக்குநர் கிருஷ்ணா கொடுத்திருக்கிறார். ’சில்லுன்னு ஒரு காதல்’ மூலம் எங்கள் பயணம்...