நான் கடவுள் இல்லை பட விமர்சனம்
சி.ஐ.டி. போலீஸ் சமுத்திரக்கனி, மனைவி இனியா, மகள், தாயுடன் வாழ்ந்து வருகிறார். இவரால் ஜெயிலுக்குப் போன சரவணன், சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயிலில் இருந்து தப்பிக்கிறார். இப்போது அவரது குறி, சமுத்திரக்கனியின் குடும்பம். முதலில் சமுத்திரக்கனியின் மகளை கடத்துகிறார். மகளை மீட்க போராடும் சமுத்திரக்கனி, வில்லனின் கொலைவெறியில் இருந்து மகளை மீட்டாரா? குடும்பம் தப்பியதா? முடிவு, பரபர கிளைமாக்ஸ்
இன்னொரு பக்கம் எஸ்.ஏ.சந்திரசேகர் கடவுளின்அவதாரம் போல் ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் சமுத்திரக்கனியின் மகள், ஜெயிலில் இருந்து தப்பிய வில்லனிடம் இருந்து தன்னுடைய அப்பாவை காப்பாற்ற கோரி, எஸ்.ஏ.சந்திரசேகருக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதுகிறார்.
சமுத்திரக்கனி – சரவணன் யுத்தத்தில் வென்றது யார்? இந்த பிரச்சினையை எஸ்.ஏ.சந்திரசேகர் எப்படி அணுகுகிறார்? சமுத்திரக்கனியின் மகள் கோரிக்கையை ஏற்றாரா? என்பது விறுவிறுப்பு குறையாத கதைக்களம்.
சமுத்திரக்கனியின் மகளை வில்லன் சரவணன் கடத்தியதில் இருந்தே படம் வேகம் பிடித்து விடுகிறது. முடிவு வரை அதே வேகம்…
சமுத்திரக்கனி யதார்த்தமான போலீஸ் அதிகாரியாக வந்து தனது பாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார். சரவணன் வில்லனாக மிரட்டுகிறார். சமுத்திரக்கனியின் உதவி போலீசாக வரும் சாக்ஷி அகர்வால் அதிரடி நடிப்பில் அசரடிக்கிறார். கவர்ச்சியில் திணறடிக்கிறார்.
அந்த உதவும் கேரக்டரில் எஸ்.ஏ.சந்திரசேகர் அம்சம்.
உதவி தேவைப்படும் போது உதவுபவர்களே உண்மையான கடவுள் என்பதை சொல்லியிருக்கும் காட்சி அமைப்புகளில் இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகர் ரசனை குறையாத இயக்கத்தில் ரசிகனை வசப்படுத்துகிறார். விஜய் பேசிய வசனங்கள் படத்தில் ஆங்காங்கே வந்து அரங்கை கரகோஷமாக வைத்திருக்கிறது.
சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்க, .மகேஷ் கே தேவ்-வின் கேமரா சண்டைக்காட்சிகளில் மாயாஜாலம் நிகழ்த்துகிறது.
காரம், மணம் குறையாத அதிரடி மசாலா.
https://chennairoyalcinema.com/?p=16520https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/8769e75a-6854-4d78-bb34-d9313d58446c-1024x709.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/8769e75a-6854-4d78-bb34-d9313d58446c-150x150.jpgதிரை விமர்சனம்சி.ஐ.டி. போலீஸ் சமுத்திரக்கனி, மனைவி இனியா, மகள், தாயுடன் வாழ்ந்து வருகிறார். இவரால் ஜெயிலுக்குப் போன சரவணன், சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயிலில் இருந்து தப்பிக்கிறார். இப்போது அவரது குறி, சமுத்திரக்கனியின் குடும்பம். முதலில் சமுத்திரக்கனியின் மகளை கடத்துகிறார். மகளை மீட்க போராடும் சமுத்திரக்கனி, வில்லனின் கொலைவெறியில் இருந்து மகளை மீட்டாரா? குடும்பம் தப்பியதா? முடிவு, பரபர கிளைமாக்ஸ் இன்னொரு பக்கம் எஸ்.ஏ.சந்திரசேகர் கடவுளின்அவதாரம் போல் ஏழை எளிய மக்களுக்கு...rcinema saravananv83@gmail.comAdministratorChennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்
Leave a Reply